![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/71/Majapahit_Empire.svg/langta-640px-Majapahit_Empire.svg.png&w=640&q=50)
மயாபாகித்து பேரரசு
From Wikipedia, the free encyclopedia
மயாபாகித்து பேரரசு (ஆங்கிலம்: Majapahit Empire; சாவகம்: Karaton Mojopahit; இந்தோனேசியம் Kerajaan Majapahit) என்பது, 1293 முதல் 1500-கள் வரை, சாவகத் தீவில் (தற்போதைய இந்தோனேசியா) அமைந்திருந்த பேரரசு ஆகும். இந்தோனேசிய மற்றும் தென்கிழக்காசிய வரலாற்றில் உச்சம் பெற்றிருந்த மிகப்பலம் வாய்ந்த பேரரசுகளில் மயாபாகித்து ஒன்றாகும்.
1293–1527 | |||||||||||
![]() நகரகிரேதாகமத்தின் படி, மயாபாகித்தின் அமைவிடம்[2] | |||||||||||
தலைநகரம் | மயாபாகித்து, வில்வதீக்தா (தற்போதைய துரோவுலான்) | ||||||||||
பேசப்படும் மொழிகள் | பழஞ்சாவகம் (மக்கள் மொழி), சங்கதம் (சமய மொழி) | ||||||||||
சமயம் | சைவம், பௌத்தம், சாவகத் தொன்னெறி, | ||||||||||
அரசாங்கம் | முடியரசு | ||||||||||
அரசன் | |||||||||||
• 1295–1309 | கர்த்தராயச செயவர்த்தனன் | ||||||||||
• 1478–1527 | கிரீந்திர வர்த்தனன் | ||||||||||
மகாபதி | |||||||||||
• c. 1336–1364 | கஜ மதன் | ||||||||||
வரலாறு | |||||||||||
• முடிசூடல் | நவம்பர் 10 1293 | ||||||||||
• தெமாகு சுல்தானகம் பொறுப்பேற்பு | 1527 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | ![]() ![]() ![]() ![]() ![]() |
இந்தோனேசிய வரலாறு ஒரு பகுதி |
---|
![]() |
மேலும் பார்க்க: |
வரலாற்றுக்கு முன் |
பண்டைய அரசுகள் |
கூத்தாய் (4ஆம் நூற்றாண்டு) |
தருமநகரா (358–669) |
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்) |
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்) |
சைலேந்திர வம்சம் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்) |
சுந்தா அரசு (669–1579) |
மெடாங்க அரசு (752–1045) |
கெடிரி அரசு (1045–1221) |
சிங்காசாரி அரசு (1222–1292) |
மயாபாகித்து (1293–1500) |
முசுலிம் அரசுகளின் எழுச்சி |
இசுலாத்தின் பரவல் (1200–1600) |
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்) |
மலாக்கா சுல்தானகம் (1400–1511) |
தெமாகு சுல்தானகம் (1475–1548) |
அச்சே சுல்தானகம் (1496–1903) |
பந்தான் சுல்தானகம் (1526–1813) |
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்) |
ஐரோப்பியக் குடியேற்றவாதம் |
போர்த்துக்கேயர் (1512–1850) |
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800) |
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942) |
இந்தோனேசியாவின் தோற்றம் |
தேசிய விழிப்புணர்வு (1908–1942) |
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45) |
தேசியப் புரட்சி (1945–50) |
இறைமையுள்ள இந்தோனேசியா |
தாராளமய மக்களாட்சி (1950–57) |
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65) |
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66) |
புத்தாக்கம் (1966–98) |
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்) |
ஹயாம் வுரூக் எனும் அதன் சக்கரவர்த்தி காலத்தில், (1350 - 1389) அதன் உன்னதமான நிலையில் காணப்பட்ட மயாபாகித்து, கஜ மதன் எனும் பேரமைச்சரின் வழிகாட்டலில் இன்றைய தென்கிழக்காசியாவின் பெரும் பரப்பளவைத் தன்னுடையதாகக் கொண்டிருந்தது.
1365-இல் எழுதப்பட்ட "நகரகிரேதாகமம்" எனும் சாவக நூலின் படி, மயாபாகித் பேரரசு இன்றைய இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, புரூணை, தெற்கு தாய்லாந்து, பிலிப்பீன்சு, கிழக்குத் திமோர் உட்பட 96 திறைநாடுகளுடன் சுமாத்திராவிலிருந்து நியூ கினி வரை பரந்திருந்தது.
ஆனாலும் மயாபாகித்து பேரரசின் தாக்கங்கள் இன்னும் வரலாற்று ஆசிரியர்களின் மத்தியில் ஆய்வுக்கு உரியதாக உள்ளது.[3]
இந்தோனேசியாவின் இன்றைய எல்லைகளுக்கு மயாபாகித்து பேரரசின் பண்டைய ஆட்சி எல்லைகளும் ஒரு காரணமாகும்.[4](p19)[5]