மணிப்பூரின் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
மணிப்பூர் வரலாறானது (பழங்காலத்தில் கங்கலிபாக்) தொல்லியல் ஆராய்ச்சி, தொன்மவியல் மற்றும் எழுதப்பட்ட வரலாறை பிரதிபலிக்கிறது.
பண்டையக் காலம் தொட்டு, மிட்டி மக்கள் உயர்ந்த மலைகளுக்கு ஊடாக இருந்த மணிப்பூர் பள்ளத்தாக்கிலும் மலைப்பகுதிகளிலும் அமைதியாக வாழ்ந்து வந்தனர். மிட்டி பன்கள் (முஸ்லீம்) மக்கள் பள்ளத்தாக்குப் பகுதியில் 1606 ஆம் ஆண்டுக்குப் பின் மிய்டிங்கு காகிம்பா ஆட்சிகாலத்தில் குடியேறினர். அப்போதிருந்து, அவர்கள் மிட்டி மக்களுடன் இணைந்து வாழ்ந்துவந்தனர்.
1891 இல் பிரித்தானிய ஆட்சியின் கீழ் மணிப்பூர் சுதேச அரசாக இருந்தது ; கடைசியில் பல சுதந்திர அரசுகள் பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போரின்போது, மணிப்பூரானது சப்பான் மற்றும் நேச நாட்டுப் படைகளுக்கு இடையிலான போர்க்களமாக இருந்தது.
போர் முடிந்த பிறகு, மணிப்பூர் அரசியலமைப்பு சட்டம், 1947 இன்படி மணிப்பூர் குடியரசு வடிவம் பெற்றது அதன்படி நிர்வாக தலைமையில் மகாராஜாவும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட அரசாங்கமும் நிறுவப்பட்டது. 1949 ஆம் ஆண்டு, மணிப்பூர் மன்னர் போதசந்திர மேகாலய மாநிலத் தலைநகரான ஷில்லாங்குக்கு வரவழைக்கப்பட்டு, தன்நாட்டை அவர் இந்திய ஒன்றியத்தில் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்படி மணிப்பூர் 1949 அக்டோபரில் இந்தியக் குடியரசின் பகுதியாக மாறியது, அதன் பின்னர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.[1] 1956 இல் மணிப்பூர் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.[2] 1972 இல் மாநிலத் தகுதியைப் பெற்றது.[3] 1972 இல் முகமது அலிமுதின் மணிப்பூரின் முதல் முதலமைச்சர் ஆனார்.[4]