![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Majrooh_Sultanpuri_%2526_Ubaid_Azam_Azmi%2528cropped_on_Majrooh_Sultanpuri%2529.jpg/640px-Majrooh_Sultanpuri_%2526_Ubaid_Azam_Azmi%2528cropped_on_Majrooh_Sultanpuri%2529.jpg&w=640&q=50)
மச்ரூக் சுல்தான்புரி
இந்திய உருதுக் கவிஞர் / From Wikipedia, the free encyclopedia
அசுரர் உல் அசன் கான் ( Asrar ul Hassan Khan ) (1 அக்டோபர் 1919 - 24 மே 2000), மச்ரூக் சுல்தான்புரி என்று அழைக்கப்படும் இவர், இந்தி மொழித் திரைப்படத்துறையில் பணிபுரிந்த ஓர் உருது கவிஞரும் மற்றும் பாடலாசிரியரும் ஆவார். [1] இவர் பல இந்தி திரைப்பட ஒலிப்பதிவுகளுக்கு இந்துசுத்தானி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.[3] [4]
விரைவான உண்மைகள் மச்ரூக் சுல்தான்புரி, பின்னணித் தகவல்கள் ...
மச்ரூக் சுல்தான்புரி | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | அசுரர் உல் அசன் கான்[1] |
பிறப்பு | (1919-10-01)1 அக்டோபர் 1919 சுல்தான்பூர், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 24 மே 2000(2000-05-24) (அகவை 80)[1] மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தொழில்(கள்) | கவிஞர், பாடலாசிரியர், திரைப்படம் [2] |
இசைத்துறையில் | 1946–2000 |
மூடு
1950 கள் மற்றும் 1960 களின் முற்பகுதியில் இந்தியத் திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்திய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த இவர், முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தில் ஒரு முக்கிய நபராகவும் இருந்தார். [5] [6] இவர் 20 ஆம் நூற்றாண்டின் இலக்கியத்தின் மிகச்சிறந்த உருது கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[7]