![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/Ajanta_cave9_2010.jpg/640px-Ajanta_cave9_2010.jpg&w=640&q=50)
மகாராட்டிராவின் கட்டிடக்கலை
From Wikipedia, the free encyclopedia
மகாராட்டிராவின் கட்டிடக்கலை (Architecture of Maharashtra) இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் குகைகள் மற்றும் பாறை-வெட்டு கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. எகிப்து, அசிரியா, ஈரான்,கிரேக்கம் ஆகிய நாடுகளில் காணப்படும் குகைகள் மற்றும் பாறையில் வெட்டப்பட்ட கட்டிடக்கலைகளை விட மகாராட்டிராவில் காணப்படுபவை வகைகள் பெரிதானவை என்று கூறப்படுகிறது. பௌத்த பிக்குகள் முதன்முதலில் கிமு 2ஆம் நூற்றாண்டில், தியானத்திற்கான அமைதியான சூழலைத் தேடி இந்த குகைகளை அடைந்தனர். மேலும் அவர்கள் இந்த குகைகளை மலைப்பகுதிகளில் கண்டனர்.[1][2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/Grishneshwar_temple_in_Aurangabad_district.jpg/640px-Grishneshwar_temple_in_Aurangabad_district.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/Ajanta_cave9_2010.jpg/640px-Ajanta_cave9_2010.jpg)
எல்லோரா மற்றும் அஜந்தா குகைகளிலுள்ள பௌத்த மற்றும் இந்து குகைக் கோயில்கள் சிறந்த கலை வடிவமைப்பு கூறுகளைக் கொண்டுள்ளன. மேலும் இந்தியாவின் பழமையான சுவர் ஓவியங்களையும் இங்கே காணலாம். மகாராட்டிராவின் புகழ்பெற்ற பாறைக் குகைகள் பல தனித்துவமான கலை கூறுகளைக் கொண்டுள்ளன. ஆனால் அந்தக் காலத்தின் சிற்பங்கள் நவீன பார்வையாளர்களுக்கு கடினமானவை என்றும் மாறும் தன்மை கொண்டவை என்றும் கருதப்படுகின்றன. பௌத்த குகைகள், குறிப்பாக கோயில்கள் (சைத்யங்கள்) அல்லது மடங்கள் (விகாரைகள்) மிக பழையவை.