போகடு கான்
From Wikipedia, the free encyclopedia
போகுடு கான் (Bogd Khan, மங்கோலிய மொழி: Богд Живзундамба Агваанлувсанчойжинямданзанванчүг, Bogd Jivzundamba Agvaanluvsanchoijinyamdanzanvanchüg; 1869–1924), சீனப் புரட்சிக்குப் பிறகு சிங் அரசமரபிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்துக் கொண்டு திசம்பர் 29, 1911இல் மங்கோலிய ககனாக (அரசராக) அரியணை ஏறியவராவார். இவர் திபெத்தில் பிறந்தவர். 8ஆவது ஜெப்ட்சுந்தம்பா குடுக்டுவான இவர் திபெத்திய பௌத்த அடுக்கதிகாரத்தில் தலாய் லாமாவையும் பஞ்சென் லாமாவையும் அடுத்த மூன்றாமிடத்தில் உள்ளார்; னவே இவரை "போக்டொ லாமா" எனவும் அழைக்கின்றனர். மங்கோலியாவின் திபெத்திய பௌத்த சமயத் தலைவராக இருந்தார். இவரது மனைவி சென்டீன் டொண்டொகுலாம், ஏக் தாகினா ("டாகினி அன்னை")யை போதிசத்வா வெள்ளைத் தாராவின் அவதாரமாகக் கருதினர்.
விரைவான உண்மைகள் போகடு கான், மங்கோலியாவின் ககன் (அரசர்) ...
போகடு கான் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியாவின் ககன் (அரசர்) | |||||||||
ஆட்சிக்காலம் | 29 திசம்பர் 1911 – 1919 1921 – 20 மே 1924 | ||||||||
அரியணை ஏறுதல் | 29 திசம்பர் 1911 | ||||||||
முன்னையவர் | எஜெய் கான் | ||||||||
பின்னையவர் | குடியரசாக அறிவிப்பு | ||||||||
பிறப்பு | c. 1869 திபெத்து | ||||||||
இறப்பு | 20 மே 1924 (அகவை 54–55) உலான் பத்தூர், மங்கோலியா | ||||||||
துணைவர் | சென்டீன் டொண்டொகுலாம் | ||||||||
| |||||||||
மதம் | திபெத்திய பௌத்தம் |
மூடு