![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/Pope-peter_pprubens.jpg/640px-Pope-peter_pprubens.jpg&w=640&q=50)
பேதுரு (திருத்தூதர்)
From Wikipedia, the free encyclopedia
புனித பேதுரு அல்லது புனித இராயப்பர் (ஆங்கிலம்:Saint Peter) என்பவர் இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) தலைமையானவர். இவரது இயற்பெயர் சீமோன் (Simon) ஆகும். இவரைத் தம் சீடராக அழைத்த இயேசு "பேதுரு" என்னும் சிறப்புப் பெயரை அவருக்கு அளித்தார்[1]. இப்பெயரின் தமிழ் வடிவம் இராயப்பர் என்பதாகும். "ராய்" என்னும் தெலுங்குச் சொல்லுக்குப் "பாறை" (கல்) என்பது பொருள்.
- பேதுரு (பண்டைக் கிரேக்கம்: Petros [πετρος]; இலத்தீன்: Petrus) "பாறை", "கல்" என்று பொருள்படும்.
திருத்தூதர் புனித பேதுரு Saint Peter the Apostle | |
---|---|
![]() முதலாம் திருத்தந்தை பேதுரு. ஓவியர்: பீட்டர் பால் ரூபென்ஸ் (1577-1640). ஓலாந்து. | |
பிறப்பு | தகவலில்லை |
இறப்பு | கி.பி. 64; உரோமை |
முக்கிய திருத்தலங்கள் | புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகர் |
திருவிழா | பெப்ரவரி 22, ஜூன் 29, நவம்பர் 18 |
சித்தரிக்கப்படும் வகை | திறவுகோல்கள்; தலைகீழாக சிலுவையில் அறையப்பட்ட மனிதர்; திருச்சபையின் முதல் திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் போற்றப்படுகிறார். |
புனித பேதுரு (திருத்தந்தை) Saint Peter | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | கிபி சுமார் 30 |
ஆட்சி முடிவு | கிபி சுமார் 67 |
முன்னிருந்தவர் | யாருமில்லை (இவரே முதலாமவர்) |
பின்வந்தவர் | லைனஸ் |
பேதுரு கலிலேயாவைச் சேர்ந்த மீனவர் ஆவார். இயேசு இவரைத் தம் சீடராகத் தெரிந்து கொண்டார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். நீரோ மன்னனின் ஆட்சிக் காலத்தில் இவர் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். தூய பேதுருவின் கல்லறை உள்ளதாகக் கருதப்படும் வத்திக்கான் நகரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமான வழிபாட்டிடங்களுள் ஒன்றாகிய புனித பேதுரு பெருங்கோவில் அமைந்துள்ளது.