புரூணை
From Wikipedia, the free encyclopedia
புரூணை (மலாய் மொழி: Negara Brunei Darussalam; ஆங்கிலம்: Brunei Darussalam; சாவி: Jawi: نݢارا بروني دارالسلام) என்பது போர்னியோ தீவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்.[2] இதன் வடக்கில் தென் சீனக் கடல் உள்ளது. இதர பாகங்களில் மலேசியாவின் சரவாக் மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது. சுல்தான்களால் ஆளப்படும் இந்த நாடு 1984 சனவரி 1-ஆம் தேதி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலைப் பெற்றது.
புரூணை Brunei Darussalam بروني دارالسلام | |
---|---|
குறிக்கோள்: "Always in service with God's guidance" (இறைவனின் துணை கொண்டு எப்போதும் சேவையில்) | |
நாட்டுப்பண்: Allah Peliharakan Sultan இறைவன் சுல்தானுக்கு ஆசீர்வாதம் வழங்குவாராக | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | பண்டார் செரி பகவான் |
ஆட்சி மொழி(கள்) | மலாய்[1] |
மக்கள் | புரூணையர் |
அரசாங்கம் | இசுலாமிய சுல்தானிய முடியாட்சி |
• சுல்தான் | அசனல் போல்கியா |
விடுதலை | |
• பிரித்தானிய இராச்சியத்திலிருந்து | சனவரி 1 1984 |
பரப்பு | |
• மொத்தம் | 5,765 km2 (2,226 sq mi) (172ஆவது) |
• நீர் (%) | 8.6 |
மக்கள் தொகை | |
• 2020 மதிப்பிடு | 460,345 |
• அடர்த்தி | 65/km2 (168.3/sq mi) (127-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $33.389 பில்லியன் (125-ஆவது) |
• தலைவிகிதம் | $74,952 (29-ஆவது) |
மமேசு (2007) | 0.838 அதியுயர் · 47-ஆவது |
நாணயம் | புரூணை டாலர் (BND) |
நேர வலயம் | ஒ.அ.நே+8.1 |
அழைப்புக்குறி | 673 |
இணையக் குறி | .bn |
|
சரவாக் மாநிலத்தின் லிம்பாங் மாவட்டத்தால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. போர்னியோவில் ஒரே இறையாண்மை கொண்ட நாடு புரூணை மட்டுமே. போர்னியோ தீவின் எஞ்சிய பகுதி மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது.
புரூணை அரசாங்கம் அதன் சுல்தானால் ஆளப்படும் ஒரு முழுமையான முடியாட்சியாகும். யாங் டி-பெர்துவான் என்று அழைக்கப்படுகிறார். இந்த நாடு ஆங்கில பொதுச் சட்டம்; சரியா சட்டம் மற்றும் பொது இசுலாமிய நடைமுறைகளின் கலவையைச் செயல்படுத்துகிறது.