![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c1/Neo-Babylonian_Empire.png/640px-Neo-Babylonian_Empire.png&w=640&q=50)
புது பாபிலோனியப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
புது பாபிலோனியப் பேரரசு (Neo-Babylonian Empire) (இரண்டாம் பாபிலோனியப் பேரரசு) என்றும் அழைப்பர்), மெசொப்பொத்தேமியாவை மையமாகக் கொண்டு கிமு 626 முதல் 539 முடிய[1] 87 ஆண்டுகள், தற்கால ஈராக், சிரியா, துருக்கி போன்ற வளமான பிரதேசங்களை ஆட்சி செய்த பாபிலோனின் 11வது வம்சத்தினரான சால்டியர்கள் ஆவார். இவர்களில் புகழ் பெற்றவர் பாபிலோனின் தொங்கு தோட்டத்தை அமைத்த இரண்டாம் நெபுகாத்நேசர் ஆவார்.
புது பாபிலோனியப் பேரரசு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 626–கிமு 539 | |||||||||
![]() புது பாபிலோனியப் பேரரசு உச்சத்தில் இருந்த போது அதன் பரப்பளவு | |||||||||
தலைநகரம் | பாபிலோன் | ||||||||
பேசப்படும் மொழிகள் | அக்காதியம், அரமேயம் | ||||||||
சமயம் | மெசொப்பொத்தேமியா சமயங்கள் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
மன்னர் | |||||||||
• கிமு 626–605 | நபோபோலசர் (முதல்) | ||||||||
• கிமு 556–539 | நபோனிடஸ் (இறுதி) | ||||||||
வரலாறு | |||||||||
• பாபிலோனியக் கிளர்ச்சி (கிமு 626) | கிமு 626 | ||||||||
• ஓபிஸ் போர் | கிமு 539 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8f/Fotothek_df_ps_0002470_Innenr%C3%A4ume_%5E_Ausstellungsgeb%C3%A4ude.jpg/640px-Fotothek_df_ps_0002470_Innenr%C3%A4ume_%5E_Ausstellungsgeb%C3%A4ude.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5f/Nebukadnessar_II.jpg/320px-Nebukadnessar_II.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/db/Fotothek_df_ps_0002472_Innenr%C3%A4ume_%5E_Ausstellungsgeb%C3%A4ude.jpg/320px-Fotothek_df_ps_0002472_Innenr%C3%A4ume_%5E_Ausstellungsgeb%C3%A4ude.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/48/Ogrody_semiramidy.jpg/320px-Ogrody_semiramidy.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Cylinder_Nabonidus_BM_WA91128.jpg/640px-Cylinder_Nabonidus_BM_WA91128.jpg)
புது பாபிலோனிய வம்சத்தவர்களுக்கு முன்னர் பாபிலோனை அக்காதியம் மற்றும் அசிரிய மக்கள் மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். புது அசிரியப் பேரரசர் அசூர்பனிபால் கிமு 627ல் இறந்த ஒராண்டு கழித்து கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பாபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், மீடியர்கள், பாரசீகர்கள், சிதியர்கள் துணையுடன் பாபிலோன் மற்றும் நினிவே[2] நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார்.
முதலாம் பாபிலோனிய வம்ச பேரரசர் அம்முராபி கிமு 18ம் நூற்றாண்டின் நடுவில் இறந்த பிறகு, பாபிலோன் நகரம் மீண்டும் கிமு 626ல் பாபிலோனியர்களின் தலைநகரமாயிற்று. கிமு 539ல் அகாமனிசியப் பேரரசர் சைரசு புது பாபிலோனியப் பேரரசை கைப்பற்றி அகாமனிசியப் பேரரசில் இணைத்தார்.