பிலாய்
From Wikipedia, the free encyclopedia
பிலாய் அல்லது பிலாய் நகர் (Bhilai, இந்தி:भिलाई) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலதில் துர்க் மாவட்டத்தின் நிர்வாக தலைமையிட நகரமாகும். 2001 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 753,837 ஆகும்.[1] 11 கிமீ தொலைவிலுள்ள துர்க்குடன் இணைந்த துர்க்-பிலாய் பெருநகரின் மக்கள்தொகை 2005ஆம் ஆண்டில் 1.062 மில்லியனாக இருந்தது.[2] மாநிலத் தலைநகர் ராய்ப்பூருக்கு மேற்கே 25 கிமீ தொலைவில் ஹௌரா–மும்பை இருப்புப் பாதையில் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆறிலும் அமைந்துள்ளது.
பிலாய் | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம் | 21°13′N 81°26′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | சத்தீஸ்கர் | ||||||
மாவட்டம் | துர்க் மாவட்டம் | ||||||
ஆளுநர் | |||||||
முதலமைச்சர் | |||||||
மக்களவைத் தொகுதி | பிலாய் | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 293 மீட்டர்கள் (961 அடி) | ||||||
குறியீடுகள்
|
இங்குள்ள பிலாய் எஃகு தொழிற்சாலை பொகாரோ எஃகுத் தொழிற்சாலைக்கு அடுத்த மிகப் பெரிய தொழிற்சாலையாகும். [3] 50,000 தொழிலாளிகள் வேலை செய்யும் இந்த ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா தொழிற்சாலை 1959ஆம் ஆண்டு சோவியத்-இந்திய கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது. பிலாய்க்குத் தெற்கே சுற்றியுள்ளப் பகுதிகளிலிருந்து இந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய இரும்புத் தாது அகழ்ந்தெடுக்கப்படுகிறது. பல மருத்துவமனைகளும் பள்ளிகளும் இந்த ஆலை நிர்வாகத்தால் நிறுவப்பட்டுள்ளன. 1986ஆம் ஆண்டு முதல் பிலாய் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்டுள்ளது.