![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/db/British_Borneo_and_Dutch_Borneo.png/640px-British_Borneo_and_Dutch_Borneo.png&w=640&q=50)
பிரித்தானிய போர்னியோ
போர்னியோ தீவில் பிரித்தானியர்கள் ஆட்சி செய்த நிலப்பகுதிகள் / From Wikipedia, the free encyclopedia
பிரித்தானிய போர்னியோ (ஆங்கிலம்: British Borneo; மலாய் மொழி: Borneo British சீனம்: 英屬婆羅洲; இடச்சு மொழி: Brits-Borneo); என்பது போர்னியோ தீவில் பிரித்தானியர்கள் ஆட்சி செய்த நான்கு நிலப்பகுதிகளின் அழைப்புப் பெயராகும்.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/db/British_Borneo_and_Dutch_Borneo.png/640px-British_Borneo_and_Dutch_Borneo.png)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/72/BritishNorthBorneoCharteredCompany.png/640px-BritishNorthBorneoCharteredCompany.png)
1841-ஆம் ஆண்டு தொடங்கி 1984-ஆம் ஆண்டு வரை 143 ஆண்டுகளுக்கு, புரூணை; சபா; சரவாக்; லபுவான் ஆகிய நிலப்பகுதிகளை பிரித்தானியர்கள் தங்களின் ஆளுமைக் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.[2]
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், 1946-ஆம் ஆண்டில் இருந்து, 1963-ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசிடம் இருந்து விடுதலை பெறும் வரையில், சரவாக் மாநிலம் பிரித்தானியப் பேரரசின் முடியாட்சி காலனியாக (Crown Colony of Sarawak) இருந்தது.[3]
அத்துடன் லபுவான் பிரதேசம், 16-ஆம் நூற்றாண்டில் இருந்து 19-ஆம் நூற்றாண்டுத் தொடக்கக் காலம் வரையில், புரூணை பேரரசின் (Brunei Sultanate) பிரதேசமாக இருந்தது.
1846 திசம்பர் 18-ஆம் தேதி, புரூணையின் சுல்தான் சார்பில் உமார் அலி சைபுதீன் II (Omar Ali Saifuddin II) எனும் புரூணை அரசப் பிரதிநிதி, லபுவான் ஒப்பந்தத்தில் (Treaty of Labuan) கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தின் மூலமாக லபுவான் பிரதேசம், ஐக்கிய இராச்சியத்திற்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.[4]