பிரதீப் சாவந்த்
இந்தியக் காவல் அதிகாரி / From Wikipedia, the free encyclopedia
பிரதீப் சாவந்த் (Pradip Sawant) (பிறப்பு 1962) ஒரு இந்தியக் காவல் அதிகாரியாவார். தற்போது மும்பை காவல்துறையில் பாதுகாப்பு பிரிவில் காவல்துறைக் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார்.[1] இவர் 2002 இல் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கத்தைப் பெற்றவர்.[2] 2000 மற்றும் 2003 க்கு இடையில் காவல் கண்காணிப்பாளராக (கண்டறிதல் குற்றப்பிரிவு) இருந்த போது மும்பையில் நடந்த 300 க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களுக்குப் பின்னால் இவர் இருந்தார்.[3][4]
பிரதீப் சாவந்த் | |
---|---|
மும்பை காலல் துறை | |
பிறந்த நாள்: 25 சனவரி 1962 (1962-01-25) (அகவை 62) | |
பிறந்தயிடம் | தானே, மகாராட்டிரம், இந்தியா |
பணிபுரிந்த பிரிவு | இந்தியா |
தரம் | காவல்துறைக் கண்காணிப்பாளர் |
விருதுகள் | சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம் |
இவர் 2004 இல் அப்துல் கரீம் தெல்கியுடன் சேர்ந்து முத்திரைத் தாள் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் 2009 இல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியமர்த்தப்பட்டார். மேலும் இவர் குற்றமற்றவர் என்று கண்டறியப்பட்ட பின்னர் ஜூன் 2007 இல் மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படை துணை ஆணையராக நியமிக்கப்பட்டார் [5]