பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பு
From Wikipedia, the free encyclopedia
பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு (Unrepresented Nations and Peoples Organization (UNPO) பிரதிநிதித்துவம் அற்ற, ஒடுக்கப்பட்ட நாடற்ற தேசிய இன மக்கள் மற்றும் நாடு கடந்த அரசுகளின் குரலை உலகளவில் ஒலிப்பதற்காக, நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான த ஹேக்கில் 11 பிப்ரவரி 1991 அன்று நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.[3][4]நாடாற்ற தேசிய இன மக்கள் சிறுபான்மை குழுவினர், நாடு கடந்த அரசுகள், இராணுவப் புரட்சியால் கைப்பற்றப்பட்ட பகுதியின் மக்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.
பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு | |
---|---|
தலைமையிடம் | பிரசெல்சு நகரம், பெல்ஜியம் |
அங்கத்துவம் | 44 குழுக்கள்[1] |
தலைவர்கள் | |
ரால்ப் ஜெ. புஞ்சே III (2018–தற்போது வரை) | |
• தலைவர்[2] | நாசர் போலதாய் |
• துணைத் தலைவர்கள்[2] | டோல்க்குன் இசா ஆப்பிரகாம் மகதி |
உருவாக்கம் | 11 பிப்ரவரி 1991 |
பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு, சுயநிர்ணய உரிமை பற்றிய புரிதலையும், மரியாதையையும் வளர்ப்பதற்கு செயல்படுகிறது, சர்வதேச அங்கீகாரம் மற்றும் அரசியல் தன்னாட்சி தொடர்பான ஆலோசனைகளையும், ஆதரவையும் வழங்குகிறது. மேலும் பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் குழுக்களுக்கு பன்னாட்டு அளவில் எவ்வாறு வாதிடுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கிறது. இவ்வமைப்பின் உறுப்பு குழுக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமைகள் மீறல்களுக்கு சர்வதேச பதிலை நேரடியாக ஆதரிக்கின்றன.
இவ்வமைப்பின் முன்னாள் நாடற்ற தேசிய இனத்தவர்களான ஆர்மீனியா, சியார்சியா, எசுத்தோனியா, லாத்வியா, கிழக்கு திமோர் மற்றும் பலாவு நாடுகள் முழு இறையாண்மை பெற்ற நாடுகளாக உருப்பெற்றுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் அவையிலும் உறுப்பினர்களாக உள்ளது. [5][6]