பிசிசுட்ரேடசு
கிமு 6 ஆம் நூற்றாண்டு பண்டைய ஏதென்சின் சர்வாதிகாரி / From Wikipedia, the free encyclopedia
பிசிசுட்ரோசு (Pisistratus அல்லது Peisistratus ( கிரேக்கம்: Πεισίστρατος Peisistratos ; c. கி.மு 600 – 527 ) என்பவர் கி.மு. 561 முதல் 527 இற்கு இடைப்பட்ட காலத்தில் பண்டைய ஏதென்சின் ஆட்சியாளராக இருந்தவராவார். ஏதென்சை உளடக்கிய கிரேக்கத்தின் முக்கோண தீபகற்பமான அட்டிகாவை ஒன்றிணைத்து, பொருளாதார மற்றும் கலாச்சார மேம்பாடுகளுடன் உருவாக்கி, பண்டைய கிரேக்கத்தில் ஏதென்சின் பிற்கால முக்கியத்துவத்திற்கான அடித்தளத்தை இவர் உருவாக்கினார்.[3] இவர் பனாதெனிக் விளையாட்டுகளில் பரிசு பெற்றவர். மேலும் இவர் ஓமரின் காவியங்களின் இறுதியான பதிப்பை அறிஞர் குழுவைக்கொண்டு உருவாக்கினார். ஏதென்சின் அடித்தட்டு வகுப்பினரின் ஆதரவைப் பெற்ற பீசிசுட்ராடோசு சனரஞ்சகத்தின் ஆரம்ப கால உதாரணம்.[4] ஆட்சியில் இருந்தபோது, உயர்குடியினரை எதிர்கொண்டு அவர்களின் சலுகைகளை வெகுவாகக் குறைத்து, அவர்களின் நிலங்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு வழங்கவும் தயங்கவில்லை. பெய்சிசுட்ராடோசு பல சமய மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு நிதியளித்தார்.[5] பொருளாதாரத்தை மேம்படுத்தி, ஏதெனியன் மக்களிடையே பொருளாதார சமநிலையே ஏற்படுத்தினார்.
பிசிசுட்ரேடசு | |
---|---|
19 ஆம் நூற்றாண்டின் சித்தரிப்பு | |
பதவியில் கி.மு. 561, கி.மு. 559–556, கி.மு. 545–527 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | c. கி.மு 600 [1] ஏதென்ஸ், கிரேக்கம் |
இறப்பு | கி.மு. 527 வசந்த காலம்[2] ஏதென்ஸ், கிரேக்கம் |
பெய்சிசுட்ராடிட்சு என்பது மூன்று சர்வாதிகாரிகளுக்கான பொதுவான குடும்பம் அல்லது குலப்பெயர் ஆகும். அவர்கள் கிமு 546 முதல் 510 வரை ஏதென்சில் ஆட்சி செய்தனர். இது பெய்சிசுட்ராடோசு மற்றும் அவரது இரண்டு மகன்களான இப்பார்கோசு மற்றும் இப்பியாசைக் குறிக்கிறது .