பால்பனின் கல்லறை
From Wikipedia, the free encyclopedia
கியாசுத்தீன் பால்பானின் கல்லறை என்பது இந்தியாவின் புது தில்லி மெக்ராலியில் அமைந்துள்ள ஒரு கட்டிடமாகும். கி.பி 1287 இல் இடிபாடுகளில் கட்டப்பட்ட இந்த கல்லறை இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை வளர்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டிடமாகும். ஏனெனில் இங்குதான் இந்தியாவில் முதல் இஸ்லாமிய பாணியிலான கட்டிடக்கலைத் தோன்றியது, [1] [2] மேலும் பலரின் கருத்துப்படி, முதல் இஸ்லாமிய குவிமாடமும் இங்குதான் கட்டப்பட்டது. இருப்பினும் இது பிற்காலத்தில் தப்பிப்பிழைக்கவில்லை. கி.பி 1311 இல் அலாய் தர்வாசா என்ற பகுதிக்கு அருகிலுள்ள குதுப் மினார் வளாகத்தில் இது கட்டப்பட்டது. இது இந்தியாவில் எஞ்சியிருக்கும் ஆரம்பகால குவிமாடமாகும். [3] கியாசுத்தீன் பால்பான் 1200 முதல் 1287 வரை தில்லி சுல்தானகத்தின் துருக்கிய ஆட்சியாளராக இருந்தார். தில்லியின் [[மம்லூக்கிய மரபு (தில்லி)|மம்லுக் வம்சம் என்படும் அடிமை வம்ச ஆட்சியின் போது இருந்தார். அவர் அடிமை வம்சத்தின் மிக முக்கியமான ஆட்சியாளர்களில் ஒருவராகவும் இருந்தார். கியாசுத்தீன் பல்பான் இறந்த பின்னர் கட்டப்பட்ட இந்தக் கல்லறை 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.