பாலிதானா சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
பாலிதானா சமஸ்தானம் (Palitana state), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பாலிதானா நகரம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் உள்ள பவநகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டிருந்தது. 1921-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பம்பாய் மாகாணத்தின் கத்தியவார் முகமையில் இருந்த பாலிதானா சமஸ்தானம் 777 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், பாலிதானா எனும் நகரம் மற்றும் 91 கிராமங்களையும், 58,000 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் பாலிதானா சமஸ்தானம் குஜராத் மாநிலத்துடன் இணக்கப்பட்டது.
விரைவான உண்மைகள்
பாலிதானா சமஸ்தானம் પાલીતાણા રિયાસત | |||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
சின்னம் | |||||
தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் பாலிதானா சமஸ்தானத்தின் அமைவிடம் | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1194 | |||
• | இந்திய விடுதலை | 1948 | |||
பரப்பு | |||||
• | 1921 | 777 km2 (300 sq mi) | |||
Population | |||||
• | 1921 | 58,000 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 74.6 /km2 (193.3 /sq mi) | ||||
மூடு