பாய்மரம்
From Wikipedia, the free encyclopedia
பாய்மரம் என்பது, பாய்க்கப்பல்களில், நீளப்பாட்டு அச்சில், ஏறத்தாழ நிலைக்குத்தாக நிறுத்தப்படும் உயரமான கழி அல்லது கம்பம் ஆகும். இது, பாய்கள், துணைக் கம்புகள், பாரந்தூக்கிகள் ஆகியவற்றைத் தாங்குவதுடன், வழிகாட்டு விளக்குகள், கண்காணிப்பு நிலைகள், சைகைத் தளம், கட்டுப்பாட்டு நிலை, அலைவாங்கிகள் போன்றவற்றுக்குத் தேவையான உயரத்தையும் வழங்குகின்றன.[1] பெரிய கப்பல்கள் பல பாய்மரங்களைக் கொண்டிருப்பது வழக்கம். அவற்றின் அளவும் ஒழுங்கமைப்பும் கப்பலின் வகையைப் பொறுத்து அமையும். ஏறத்தாழ எல்லாப் பாய்மரங்களுமே பிணைவடக் கம்பங்கள் ஆகும்.[2]