பழனி
இது தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் தேர்வு நிலை நகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
பழனி (Palani) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வட்டம் மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை நகராட்சியும் ஆகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள்
பழனி | |||||||
— தேர்வு நிலை நகராட்சி — | |||||||
அமைவிடம் | 10°27′00″N 77°30′58″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திண்டுக்கல் | ||||||
வட்டம் | பழநி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சித் தலைவர் | |||||||
ஆணையர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
67,231 (2001[update]) • 10,140/km2 (26,262/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
6.63 சதுர கிலோமீட்டர்கள் (2.56 sq mi) • 341 மீட்டர்கள் (1,119 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.municipality.tn.gov.in/palani/ |
மூடு
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பழனி மலையில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால் ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு செய்த புகழ் பெற்ற முருகன் சிலை, மலைக்கோயிலில் இருக்கிறது. இவ்வூரில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருஆவினன்குடி கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் ஆண்டிப்பட்டி மலை, பழனியில் கண்டுபிடிக்கப்பட்டன. பழனி நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.