பருத்தித்துறை
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
பருத்தித்துறை (Point Pedro, சிங்களம்: පේදුරු තුඩුව) இலங்கையின் வடபகுதி அந்தலையில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாணத்தின் வடமராட்சி வலயத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டு மையமாகும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தையும் இது கொண்டுள்ளது. 1995 இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இந்த நகரம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. பருத்தித்துறை தமிழர்கள் வாழும் நகரமாகும். ஈழப்போர்க் காலத்தில் உயர் பாதுகாப்பு வலயத்துள் அமைந்திருந்த நகரின் பெரும்பகுதிகள் 2009 இல் போர் நிறைவடைந்ததை அடுத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டன. 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இந்த நகரம் பாதிக்கப்பட்டது. இலங்கையின் புகழ் பெற்ற ஹாட்லிக் கல்லூரி இங்கு அமைந்துள்ளது. பருத்தித்துறையானது அதிகளவு பாடசாலைகளின், கோவில்கள் நீதிமன்றம், மின்சாரசபையையும், அரச தனியார் போக்குவரத்து சபையை, ஆதார வைத்தியசாலை, நகரசபை, பிரதேச செயலகம், பிரதேச சபை, வலயக்கல்வி அலுவலகம், சுற்றுலா மற்றும் மீன்பிடி கடற்கரை, வெளிச்சவீடு, உள்ளூர், வெளிமாவட்ட போக்குவரத்து வசதி, வங்கிகள், திரையரங்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஐந்து முக்கிய நகரங்களுக்குச் செல்லும் வீதிகள் (காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொடிகாமம், சாவகச்சேரி, மருதங்கேணி) சந்திக்கும் இடமாகவும் உள்ளது.
பருத்தித்துறை | |
---|---|
ஆள்கூறுகள்: 9°49′0″N 80°14′0″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ.பிரிவு | வடமராட்சி வடக்கு |
அரசு | |
• வகை | பருத்தித்துறை நகரசபை |
• தலைவர் | சபாநாயகம் இரவீந்திரன் (த.தே.கூ) |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.65 km2 (4.50 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 31,351 |
• அடர்த்தி | 1,044/km2 (2,700/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |