பரமகம்ச யோகானந்தர்
யோகி மற்றும் குரு. / From Wikipedia, the free encyclopedia
பரமஹம்ச யோகானந்தா (Paramahansa Yogananda, வங்காள மொழி: পরমহংস যোগানন্দ) (5 சனவரி 1893 – 7 மார்ச்சு 1952), பிறப்பு முகுந்தலால் கோஷ் (வங்காள மொழி: মুকুন্দলাল ঘোষ), இந்திய யோகியும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் மேற்கத்தியர்களுக்கும் தியானம் மற்றும் கிரியா யோகத்தை படிப்பித்த குருவும் ஆவார். யோகோடா சத்சங்க சமூகம், இந்தியா என்ற நிறுவனத்தையும் தன்னுணர்தல் தோழமை என்ற நிறுவனத்தையும் இதற்காக நிறுவினார். அவரது தன்வாழ்க்கை நூலான, யோகியின் சுயசரிதை சிறந்த ஆன்மீக வழிகாட்டுதல் நூலாக விளங்குகின்றது. 21ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[2][3]
பரமஹம்ச யோகானந்தர் | |
---|---|
பிறப்பு | (1893-01-05)5 சனவரி 1893
[1] கோரக்பூர் (தற்கால உத்தரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 7 மார்ச்சு 1952(1952-03-07) (அகவை 59) மில்லினியம் பில்ட்மோர் ஓட்டல், லாசு ஏஞ்செலசு, கலிபோர்னியா |
இயற்பெயர் | முகுந்தலால் கோஷ் |
தேசியம் | இந்தியர் மற்றும் அமெரிக்கர் |
தத்துவம் | இந்து சமயம், கிரியா யோகா |
குரு | சுவாமி யுக்தேசுவர் கிரி |
கையொப்பம் |
"நீ ஓர் கனவைப்போல உலகத்தில் நடக்கிறாய். நமது உலகம் கனவிற்குள் ஓர் கனவாக உள்ளது; இதனை நீ உணர்ந்து நீ இங்கிருப்பதற்கு ஒரே காரணம் கடவுளே ஒரே இலக்கு, ஒரே நோக்கு என இருப்பதாகும். நீ அவனுக்காக மட்டுமே இருக்கிறாய். அவனைக் கண்டறிய வேண்டும்." – தி டிவைன் ரோமான்சு நூலிலிருந்து