From Wikipedia, the free encyclopedia
--Umapathy 00:00, 26 நவம்பர் 2006 (UTC)
வாருங்கள், Vij!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
நல்வரவு விஜயராகவன். உங்கள் பங்களிப்பால் தமிழ் விக்கிப்பீடியா மேலும் வளம் பெறும் என்று நம்புகின்றேன். --Natkeeran 02:03, 2 டிசம்பர் 2006 (UTC)
விஜயராகவன், நீங்கள் ஆரியர் ஏன்ற கட்டுரையில் கூற விரும்புவதை சுருக்கி எழுத முடியுமா; 3-5 பந்திகள். உங்கள் பார்வையையும் கட்டுரையில் தகுந்த முறையில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --Natkeeran 02:03, 2 டிசம்பர் 2006 (UTC)
விஜய், தமிழ்ப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சேர்க்கலாம். ஆனால், பிற நாட்டுப் படங்களை நீக்க வேண்டும் என்று அவசியமில்லை. தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உலகளாவிய பார்வையும் அவசியம் தானே. ?--Ravidreams 11:58, 7 டிசம்பர் 2006 (UTC).
தமிழ்நாட்டு வேளாண்மையை பற்றி பேசும்போது, தமிழ்நாட்டு படங்கள் ஒன்றாக போகும். அப்பொதுதான் 'மண்வாசனை' வீசும். அப்பொழுதுதான், மக்கள், கட்டிடங்கள், கருவிகள், வேலை/ஓய்வு பழக்கங்கள் எப்படி தமிழ்நாட்டில் இருக்கும் என படிக்கிரவர்களுக்கு சொல்லாமலேயே புரியும். ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமம். அந்த நோக்கில்தான் அப்படி எழுதினேன். ஐரொப்பிய நாட்டுபுரங்களின் கட்டுரையில் தமிழ்நாட்டு சீன்கள் செல்லா.--விஜயராகவன் 12:29, 7 டிசம்பர் 2006 (UTC).
ரவிட்ரீம்ஸ் - நீங்கள் தமிழ்நாட்டை மையமாக கொள்ளாமல், பொதுவாக வேளாண்மையை பற்றி எழுதுகிறீர்களென்றால், எந்த நாட்டு படமும் போகும்; நவீன படஙக்ளும் போகும். அது கட்டுரையின் குறியைப் பொருத்தது. நான் கட்டுரையின் குறியை தப்பாக புரிந்துகொண்டிருக்கலாம்--விஜயராகவன் 13:05, 7 டிசம்பர் 2006 (UTC).
தற்பொழுது உள்ள வேளாண்மை கட்டுரை உலக நோக்கு உடையது தான். பொதுவாக விக்கிப்பீடியா கட்டுரைகள் உலக நோக்கோடு தான் எழுதப்படுகின்றன. கட்டுரையின் ஒரு பகுதி தமிழ்ச் சூழலை விளக்கி எழுதப்படுகிறது. அந்தப் பகுதிகளில் கண்டிப்பாக தமிழ்ப்படங்கள் இடம்பெற வேண்டும். கட்டுரை தலைப்புகள் தமிழ்நாட்டைக் குறித்ததாக இருக்கும்போதும் தமிழ்ப் படங்கள் சரியாக இருக்கும். அப்புறம், நீங்க என்ன ரவின்னே அழைக்கலாம்.--Ravidreams 13:50, 7 டிசம்பர் 2006 (UTC)
ஒன்றை மட்டும் உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். விக்கிப்பீடியாவிற்கு இதுவரை தொடர்ந்து பல இந்தியர் பங்களித்து வருகிறார்கள். யாரும் உங்களைப் போல ரகர, றகர பிழைகள் விட்டதில்லை. ஈழத்தில் ரகரறகர வேறுபாடு தெளிவாகவே உள்ளது.
அது இருக்கட்டும். அந்த மொழி ஆய்வாளர்கள் யார்?
மரபினால் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் , யாயோடு வாயாக சொல்லிக் கொடுக்க்ப்பட்டு, நம்மிடம் உள்ளன. வேதங்கள் மனித டேப் ரிகாடர்கள்' என கருதும் அதே மொழி ஆய்வாளர்கள் தானா?
இன்னும் உங்களுக்கு வேதங்கள் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் வேண்டும். ஆனால் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் வித்தியாசம் கூடாது; நடைமுறையற்ற இலக்கணங்கள் அகற்றப்பட வேண்டும். இல்லையா? உங்கள் அற்புதமான கருத்துக்களுடன் நாம் விவாதிக்கவும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதுதான் பெரிய முரண்நகை.
கோபி 04:53, 9 டிசம்பர் 2006 (UTC).
கோபிக்கு பதில்:.
"இன்னும் உங்களுக்கு வேதங்கள் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் வேண்டும். ஆனால் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் வித்தியாசம் கூடாது. வேதங்கள் மனித டேப் ரிகாடர்கள்' என கருதும் அதே மொழி ஆய்வாளர்கள் தானா?" .
நிச்சியமாக அந்த ஆய்வாளர் பெயரை தருகிரேன். ஹரால்ட் ஷிப்மன் அல்லது ஜார்ஜ் ஹார்ட்டின் ஒரு கட்டுரையில் படித்ததாக ஞாபகம். ஆனால், நான் எவ்வளவோ வல்லுனர்கள் கட்டுரை/புத்தகப் பெயரை கொடுத்தாலும் அதை நம்ப போகிறீர்களா??. Your attitude is irrational.
கோபி இந்த இரண்டு விஷயங்களும் தனி. வேதமொழி செவ்வியல் சமஸ்கிருத காலத்திலேயே நடைமுறையில் இல்லை. வேதமொழி சடங்குகளுக்கு வெளியே யாரும் உபயோகிப்பத்தில்லை - சமஸ்கிருத விசிறிகள் கூட. ஆனால் தமிழில் அந்தஸ்து வேறு. அது பல கோடி மக்களின் வாழ்வில் நடைமொழி. ஆனால் தற்போது விஞ்ஞானம், பொருளாதாரம், மனித சம்பநதமான ஆய்வு போன்றவைக்கு உபயோகமாகவில்லை.போகிர போக்கை பார்த்தால் அப்படி ஆகாது போல தோன்றுகிறது. இந்த வித்தியாசத்தை மனதில் வைக்காமல், நான் ஏன் தமிழை வேதமொழி போல கருதவில்லை என சாட்டுகிறீர். --விஜயராகவன் 10:23, 9 டிசம்பர் 2006 (UTC).
உங்கள் கேள்வி "அது இருக்கட்டும். அந்த மொழி ஆய்வாளர்கள் யார்?" அதற்க்கு சரியான பதில் கிடைத்து விட்டது. அதை எழுதியவர் ஜார்ஜ் ஹார்ட் - பேச்சு (மேலும் பல விஷயங்களில்) தமிழ் வல்லுனர்.
http://www.infitt.org/tscii/archives/msg00146.html .
"Languages grow historically. As they grow and change, their phonetics change. Very few Tamils, for example, can pronounce the difference between the 2 r's (though Malayalis and Sri Lankan Tamils can). This is a historic change -- 1000 years ago, the phonemes were probably distinct in almost all dialects of Tamil." .
வேறொடு இடத்தில் சொல்கிறார்: Proto-Dravidian had a set of alveolar stops, midway between dental and retroflex. Tamil retained them in many forms -- Sri Lankan, some southern dialects, and of course modern Malayalam (which is an offshoot of medieval Tamil). Most spoken Tamil dialects -- and now even the way in which most people pronounce the formal language -- have lost them. In terms of pronunciation, I would guess that Malayalam and SL Tamil are closer to older Tamil than modern Indian Tamil. ........... One issue with SL Tamil is that it has lost the "zh" and replaced it with retroflex l. This is also true of most non-Brahmin Tamil, though not of the Brahmin dialect in India and Malayalam. If you are a Sri Lankan, then you distinguish between kaaTTu (forest), kaaRRu (wind) and kaattu (having waited). Indian Tamils do not make the latter two distinctions, though Malayalis do. G. Hart--விஜயராகவன் 22:06, 9 டிசம்பர் 2006 (UTC).
றகரத்தைப் பற்றி மற்றொரிடத்தில் எழுதுகிறார். As you may know, Malayalis pronounce "Tamil" sounds better than most Tamils, who cannot say "za" properly. Almost no Tamil in India can properly articulate "Ra." The sound has been lost in their language, though they still write it. --விஜயராகவன் 23:01, 9 டிசம்பர் 2006 (UTC)
விஜய், நீங்கள் தமிழ் வழியத்தில் படித்தீர்கள் என்பது சரியான ஆச்சரியமாக இருக்கிறது. நம்ப முடியவில்லை. பேச்சுத் தமிழிலும் உச்சரிப்பை சரிவர பின்பற்றுவது தான் தீர்வு. இலக்கணத்தையும் எழுத்துத் தமிழையும் மாற்றுவது அல்ல. அப்படி மாற்றினால், பெரும் குழப்பம் வரும். இரண்டு தலைமுறைகள் கழிந்து இந்த தலைமுறையில் என்ன எழுதினோம் என்பதையே அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாமல் போகி விடும். இதே காரணத்துக்காகத் தான் வட்டார நடைகளை விட்டு பொதுத் தமிழ் நடையில் எழுதுவதும். அதே வேளை, கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ் என்று பேச்சுத் தமிழ் வேறுபடுவது மொழியின் சிதைவு அல்ல. அது மொழியின் ஒரு கூறு. இது பக்கம் பக்கமாக உரையாட வேண்டிய விதயம். ஒரு குறிப்புக்காக இங்கு சொல்கிறேன். வேறு தளங்களில் விரிவாக உரையாடலாம். நீங்கள் எழுதி வரும் ஆரியர் கட்டுரையின் தலைப்பை வேதங்களில் ஆரியர் பற்றிய குறிப்புகள் என்று மாற்றி விட்டால் பாதி சர்ச்சை நீங்கி விடும். உங்கள் கட்டுரையும் வேதத்தை மட்டுமே முதன்மை ஆதாரமாக கொள்வதால் பொருத்தமான தலைப்பாக இருக்கும். தவிர, வேதங்களில் உள்ளது என்று observation மட்டும் தந்தால் இன்னும் 25% பிரச்சினை தீரும். observationஐ கொண்டு inferences எழுத முற்படும் போது தான் வரலாற்றுத் திரிப்பு என்ற முக்கியசர்ச்சை எழுகிறது.--Ravidreams 10:37, 8 டிசம்பர் 2006 (UTC)
ரவி, எழுத்து தமிழ், பேச்சு தமிழ் வேறு வேறு என்றோ முடிவாகி விட்டது. இங்கு விவாதிக்க என்ன இருக்கின்றது. புனைகதையில் வட்டாரத் தமிழ் பயன்படுத்துவது வேறு, கலைக்களஞ்சியத்தில் அப்படிப் பயன்படுத்த முடியாது. நல்ல கட்டுரைத் தமிழ் நடையில் வட்டார வேறுபாடு காண்பிப்பது கடினம். இருப்பினும் இலங்கை எழுத்தில் ஒரு சில முரண்பாடுகள் இருப்பது உண்மை. --Natkeeran 01:49, 9 டிசம்பர் 2006 (UTC)
ஆனந்தரங்கம் குறித்த உங்கள் கட்டுரைத் தகவல் நன்று. பாராட்டுக்கள். தமிழில் முதலில் நாட்குறிப்பு எழுதியவர் இவர் என்ற தகவலை விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா பகுதியில் காட்சிப்படுத்த உள்ளேன். சிப்பாய் எழுச்சி குறித்து ஏற்கனவே முதல் இந்திய விடுதலைப் போர் என்று ஒரு கட்டுரை உள்ளது. அத்துடன் உங்கள் சிப்பாய் எழுச்சி கட்டுரையை சேர்க்கலாம். அப்புறம், சிப்பாய் எழுச்சி கட்டுரைத்தலைப்பின் இறுதியில் முற்றுப் புள்ளி வைக்கப்படிருக்கிறது. கட்டுரைத்தலைப்பில் முற்றுப் புள்ளி தேவை இல்லை.--Ravidreams 22:06, 9 டிசம்பர் 2006 (UTC).
ரவி , பாராட்டுக்கு நன்றி. நான் முதலில் வேலூர் என்ற பெயரில் தேடி, வேலூர் சிப்பாய் கலகம் கிடைக்க வில்லை. அதனால்தான், நான் முதலில் எழுதுவதாக நினைத்தேன். 'முற்றுப் புள்ளி' பீட்பேக் நன்றி. அந்த தவறு நான் விகியில் இன்னும் சரியாக , வேகமாக எழுதத் தெரியாமல், பயந்து, பயந்து எழுதினதின் விளைவு. சரியாக்க வேண்டுமானல் இரு கட்டுரையும் ஒன்றாக்கலம். அதில் தவறு இல்லை. --விஜயராகவன் 22:16, 9 டிசம்பர் 2006 (UTC).
இன்னொரு சங்கதி; ஆனந்தரங்கம் எழுதிய நாட்குறிப்புதான் நமக்கு கிடைத்துள்ளது - அதுவும் அதிர்ஷ்ட வசத்தால். அதற்க்கு முன்னாடி எழுதிய நாட்குறிப்பு மறைந்து விட்டது. ஆனால் பொதுமக்களுக்கு தமிழில் முதலில் நாட்குறிப்பு எழுதியவர் என ஆனந்தரங்கத்தை அறிமுகப் படுத்துவதில் தவரில்லை.--விஜயராகவன் 22:22, 9 டிசம்பர் 2006 (UTC).
ரவி, வேலூர் சிப்பாய் கலகத்தை 'முதல் இந்திய விடுதலைப் போர்' என அழைக்க முடியாது. ஏனென்றால், சிப்பாய் கலகக் காரர்களுக்கு ஒரு பரந்த அரசியல்/ ராணுவ குறி இல்லை. அவர்கள் மொத்த தமிழ் நாட்டின் விடுதலைக்கொ, அல்லது மொத்த இந்தியாவின் விடுதலைக்கோ கனவு கூட காணவில்லை. தங்கள் கலகத்தை மற்ற பிரதேசங்களுக்கு 'ஏற்றுமதி' செய்ய நினைக்கவே --விஜயராகவன் 22:41, 9 டிசம்பர் 2006 (UTC)
விஜய், இங்கு பயப்பட ஒன்றும் இல்லை. கருத்தளவில் தீவிரமான விமர்சனங்களை முன்வைப்போமே தவிர, தமிழ் விக்கிப்பீடியா போன்ற நட்பான குழுமம் தமிழ் இணையத்தில் எங்கு தேடினாலும் காணக்கிடைக்காது. நீங்கள் கட்டுரைகளை எழுத முனையும் முன் இங்கு ஏற்கனவே உள்ள பிற கட்டுரைகளை நிறைய படியுங்கள். அவை உங்கள் எழுத்துத் திறனை வளர்க்க உதவும். பிறகு, தயக்கமின்றி எழுதலாம். தவிர, இதன் மூலம் பலனுள்ள பல பின்னூட்டுகளையும் நீங்கள் இட்டு வருகிறீர்கள். இது தமிழ் விக்கிப்பீடியா உயர்த்த உதவும். எ-கலப்பை-யில் தமிழ்99 விசைப்பலகை முறையில் தட்டச்சுங்கள். இது பிழைகளை தவிர்த்து விரைவாக எளிதாக எழுத உதவும். வேறு எந்த தட்டச்சு முறையை நான் பரிந்துரைப்பதில்லை. இது குறித்த என் வலைப்பதிவுக்குப் பார்க்க - http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_08.html
ஆனந்தராகம் தான் முதலில் நாட்குறிப்பு எழுதினார் எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால், நமக்கு கிடைக்கும் முதல் நாட்குறிப்பு அவருடையது தான் என்பது தான் நம் புரிதல். சரி தானே? வேலூர் கலகம் குறித்து அந்தந்த பக்கங்களில் கருத்து தெரிவிக்கிறேன். --Ravidreams 23:10, 9 டிசம்பர் 2006 (UTC). --விஜயராகவன் 23:39, 9 டிசம்பர் 2006 (UTC)
ரவி, ஆ.ர.பி.. பற்றி உங்கள் புரிதல் சரிதான். நான் இன்னும் விகியில் கற்றுக் கோண்டு, வேகமாக எழுதி, சிறந்த முறையில் கட்டுரையை எழுத எவ்வளவோ இருக்கிறன. இப்போ எனக்கு விகியில் பரீட்சை வைத்தால், 100 க்கு 30 மார்க் தான் வாங்குவேன். பை த வே, நான் வேலூர் எழுச்சியை பற்றி பல வருடங்களுக்கு முன் கூகிளில் எழுதினேன். அப்போது, அது யார் கவனத்திலையும் இல்லை. http://groups.google.co.uk/group/soc.culture.indian/browse_thread/thread/bde6c60a0b365728/d4c673ada7d324c0?lnk=st&q=%22mutiny+in+vellore%22&rnum=2&hl=en#d4c673ada7d324c0 --விஜயராகவன் 23:39, 9 டிசம்பர் 2006 (UTC)
விஜய், தமிழ்நாட்டு வயற்காட்டுப் படிமம் கிடைக்காததால்தான் ஐரோப்பிய படிமத்தைப் பயன்படுத்தினேன். தற்போது மாற்றியுள்ளேன். மற்றபடி கட்டுரைகளில் பொதுவான தலைப்புக்களுக்கு பல பண்பாடுகளின் படங்களையும் தகவல்களையும் தமிழரின் பண்பாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து தர வேண்டும். -- Sundar \பேச்சு 09:24, 11 டிசம்பர் 2006 (UTC).
நன்றி, ஒத்துக் கொள்கிறேன்.--விஜயராகவன் 09:33, 11 டிசம்பர் 2006 (UTC)
குற்றம்/மர்மம் பொருந்துமா என்று தெரியவில்லை. கட்டுரையை எழுதி நீங்களே ஒரு பொருத்தமான பகுப்பு தரலாம். நன்றி. --Natkeeran 04:31, 19 டிசம்பர் 2006 (UTC)
உபநிடதம், வேத சாரம் போன்ற இந்து மதத்துடன் தொடர்புடைய சில கட்டுரைகளின் தகவல்கள் சரியாவென்பதைச் சரி பார்த்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --கோபி 15:54, 28 டிசம்பர் 2006 (UTC)
விஜயராகவன், பொதுவாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். நேரடியாக அகராதியில் இருந்து புழக்கத்தில் இல்லாத தமிழா என்று உறுதிப்படுத்திக்கொள்ள இயலாத சொற்களை ஆள்வதை விடுத்து இது குறித்து ஏற்கனவே தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள் உங்களிடம் இருந்தால் அதில் இருந்து சொற்களை எடுத்தாளுங்கள். குறைந்தபட்சம், புதிய சொற்கள் அருகில் ஆங்கிலத்தில் அடைப்புக்குறி விளக்கம் தாருங்கள். --Ravidreams 17:55, 9 பெப்ரவரி 2007 (UTC)
பல இடங்களில் நீங்கள் சமஸ்கிரத சொற்களை முன்னிறுத்தவது போன்று தோன்றுகின்றது. தமிழ் கட்டுரை எழுத்து நடையில் சமஸ்கிரத சொற்கள், கிரந்த எழுத்துக்கள் தொடர்பான உங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தால் நன்று. நன்றி. --Natkeeran 17:20, 14 பெப்ரவரி 2007 (UTC).
சமஸ்கிருதம் என்பதை விட புழக்கத்தில் இல்லாத புதைந்து போன அகராதிகளில் மட்டுமே இருக்கக்கூடிய பிறமொழிச் சொற்களை மட்டும் புகுத்துவது போல் தெரிகிறது. (சுலவு போன்ற சொற்கள் விதிவிலக்கு). சொற்துல்லியம் என்பதற்காக வழக்கொழிந்த பிற மொழிச் சொற்களை புகுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.--Ravidreams 17:51, 14 பெப்ரவரி 2007 (UTC)
உங்கள் நிலைப்பாடுகளை தொகுத்துப் பார்த்தால் மொழிநடை பின்வருமாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் விழைவது போல் தெரிகிறது.
1. நிகழ்கால ஊடகத் தமிழை ஒட்டி இருக்க வேண்டும்.
2. புதுத் தமிழ்ச் சொல்லாக இருந்தாலும், சுருக்கமான சொற்கள் வேண்டும்.
3. துல்லியமான சொற்கள் அவை பிற மொழிச் சொல்லாக இருந்தாலும், பழந்தமிழ் அகராதிகளில் இருக்கும் பட்சத்தில், ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேனா? இதில் உங்களிடம் தனித்து உரையாடுவதாக கருத வேண்டாம். நீங்கள் சுட்டிக் காட்டுவன தமிழ் விக்கிபீடிநாவின் குறையாக தமிழ் விக்கிப்பீடியா வட்டத்துக்கு வெளியே உணரப்படுகிறது என்று அறிகிறேன். மேலே உள்ளதில் முதல் கருத்தை என்னிடம் அண்மையில் பேசிய ஒரு ஊடகவியலாளரும் தெரிவித்தார். உங்கள் கருத்துக்களை இங்கு தாருங்கள். பின்னர், இதை ஒரு விக்கிப்பீடியா கொள்கை உரையாடலாக தகுந்த பக்கத்தில் தொடர்வோம். நன்றி--Ravidreams 19:04, 14 பெப்ரவரி 2007 (UTC)
நற்கீரன் --Natkeeran 19:21, 14 பெப்ரவரி 2007 (UTC)
"செய்தித் தமிழ் நடைக்கும் கலைக்களஞ்சிய தமிழ் நடைக்கும் வேறுபாடுகள் உண்டு". நட்கீரன், இது எனக்கு தெரியாதது அல்ல. செய்தி சம்பவங்கள் மேல் கவனம் செலுத்துகின்றன. விக்கி கட்டுரைகள் ஒரு தலைப்பின் கீழுள்ள கருத்தின் மேல் கவனம் செலுத்துகிறன. 'நடை' என்பதை நான் 'சொல் தேர்வுகள்' என்ற விதத்தில் உபயோகித்தேன். அதனால் தான் சொற்தேர்வுகளுக்கு செய்தி நிருவனங்களையும், இலக்கியங்களையும் இழுத்தேன். செய்தி தாள்கள் தங்கள் வாழ்விற்கு எல்லோரும் புரியும்படி எழுத வேண்டும் என்பதை மறக்காதீர்கள், செய்திதாளின் உயிரே வாசகர்கள் புரிந்து அதை பணம் கொடுத்து வாங்குவதில் உள்ளது. அதனால் செய்திதாளின் தமிழை ஏளனம் செய்யாதீர்கள் மேலும் விக்கி இணையிலிருப்பதால், செய்தித்தாளுக்கு இல்லாத பல வசதிகள் விக்கிக்கு உள்ளன. விக்கியில் நாம் சொல் சிக்கனமாக பல விஷயங்களை துல்லியமாக வைக்க வேண்டும்.--விஜயராகவன் 13:27, 15 பெப்ரவரி 2007 (UTC)
அண்மையில் மொழி சார் உரையாடல்கள் பெருகி, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க உங்கள் அனைத்து கருத்துக்களையும் இங்கு குவிக்கவும். நன்றி. --Ravidreams 14:03, 16 பெப்ரவரி 2007 (UTC)
விஜயராகவன், உங்களுக்கு சமஸ்கிரத ஈடுபாடு இருந்தால், அதை தமிழ் மக்களுடன் பகிர விரும்பினால் அதை த.வி.வில் பல்வேறு வழிகளில் செய்யலாம். சமஸ்கிருத தமிழியல் கட்டுரையையும் அத்துறை சார் பிற கட்டுரைகளையும் உருவாக்கி தரலாம். எ.கா தமிழ் சமஸ்கிரதம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை. சமஸ்கிரதத்துக்கும் தமிழுக்கும் இருக்கும் வரலாற்று தொடர்பை விளக்கி கட்டுரைகள் தரலாம். தமிழர் பண்பாட்டில் சமஸ்கிரதத்தின் முக்கியத்துவத்தை விளக்கி கட்டுரைகள் தரலாம்.
நாம் மொழி வெறியர்கள் அல்ல. தூய தமிழ், களங்கப் பட்ட தமிழ் என்று தீவர துருவப் பார்வைகளைத் தவிர்த்து நல்ல தமிழ் என்ற ஒரு மிதவதா அல்லது மூன்றாவது வழியை பின்பற்றுவதே சிறப்பு. பரந்த மக்களுக்கு த.வி. செல்ல வேண்டும் என்ற உங்கள் கருத்து நன்றே. அதுவே அனைவரின் நோக்கமும். ஆனால் ஒரு கலைக்களஞ்சியத்தை ஒரு பரவலர் (popular) அல்லது சந்தை ஈடுபாடுகளுக்கு மட்டும் இசைந்து ஆக்க முடியாது. எனினும் விக்கி ஒரு கட்டற்ற திறந்த செயற்பாடு, எனவே பரந்த பரவலர் ஈடுபாடுகளை சேர்த்து வளரக் கூடியதே.
தமிழ் விக்கிப்பீடியாவில் நல்ல தமிழை முன்னிறுத்தாமல் வேறு எங்கு செய்யலாம் என்று நீங்கள் சொன்னாலும் நன்று. நன்றி.
--Natkeeran 12:54, 19 பெப்ரவரி 2007 (UTC)
விஜயராகவன், அருள்கூர்ந்து ஆக்கம் தரும் வகையில் கட்டுரைகள் ஆக்க உதவுங்கள். எழுத நூறாயிரக்கணக்கான தலைப்புகளும் கருத்துக்களும் உள்ளன. உங்களுக்கு முறையுடன் மறுமொழிகள் தர வேண்டும் என்பதாலேயே நானும் பிறரும், பேச்சுப் பக்கங்களில் பதில்கள் தருகின்றோம். உங்களுக்கு நானும் பிறரும் தந்த மறுமொழிகளின் மொத்த பைட் அளவைப் பார்த்திர்களானால், அதில் குறைந்தது 20-30 குறுங்கட்டுரைகளாவது எழுதியிருப்போம். கருத்தாடல்கள் மிகவும் தேவையானது. அவைகளை நான் வரவேற்கிறேன். ஆனால் முடிவின்றி எதிர்-எதிர்மொழிகள் பேசுவதால் பயன் என்ன. நான் சமஸ்கிருதத்தையும், அதன் ஒலி இனிமையையும் விரும்பிப் போற்றுபவன். அது போலவே தமிழ் மொழியையும் அதன் ஒலி இனிமையையும் போற்றுபவன். அதே போலத்தான் இந்தி, ஆங்கிலம் முதலியனவும். நல்ல எளிய தமிழில் இருந்தால் பரவலாக எல்லாத் தமிழருக்கும் பயன்படுமாறு இருக்கும். அதுமட்டுமல்லாமல், வளர்ந்து, கிளைத்து செழிப்படைவதற்கும் நல்லது. இவைகளைக் கருத்தில் கொண்டே மாற்றங்கள் செய்கிறேன். சமஸ்கிருதம், ஆங்கிலம் என்று சொற்களை மாற்ற வில்லை. எப்படிச் சொன்னால் இன்னும் சிறப்பாக அமையும், பரவலாக புரிந்து கொள்ள உதவும் என்று எண்ணியே மாற்றங்கள் செய்கிறேன். நீங்கள் அருள் கூர்ந்து தவறாக எண்ண வேண்டாம். உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகளில், தரமான கட்டுரைகள் ஆக்கித் தந்து உதவ வேண்டுகிறேன். --செல்வா 20:04, 19 பெப்ரவரி 2007 (UTC)
கூர்ப்பித்த என்றால் improved என்ற பொருளில் (தொல்காப்பியருடையது) உபயோகப்படுத்தினேன் அகராதிப்படி
கூர்ப்பு (p. 1075) [ kūrppu ] n kūrppu . < கூர்²-. 1. Abundance, excess; improvement; உள்ளது சிறந்து மிகுகை. (தொல். சொல். 314.)
மேலும் பார்க்க
ஊர்ச்சிதம் (p. 0498) [ ūrccitam ] n ūrccitam . < ūrjita. 1. Confirmation, ratification; ஸ்திரம். 2. Import unity; compulsion; நிர்ப்பந்தம். அவ்வளவு ஊர்ச் சிதமாய்க் கேட்கக்கூடாது.
அகராதியில் ஊர்ஜிதம் என்று இல்லை ; நீங்கள் நான் கிரந்த விரும்பி என சொல்ல முடியாது :))
நான் சொன்னது கடுஞ்சொல்லாக தோன்றினால், மன்னிக்கவும்.--விஜயராகவன் 16:59, 20 பெப்ரவரி 2007 (UTC)
விஜய், கட்டுரை ஆக்கங்களில் கவனம் செலுத்துமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். பிறர் எவ்வாறு திருத்தினாலும் வரலாற்றில் நீங்கள் எழுதியது பதிவுசெய்யப்பட்டே இருக்கும். அத்துடன் செய்யப்படும் மாற்றங்களைப் பலரும் அவதானித்துக் கொண்டே இருப்பதால் நிச்சயம் நாச வேலைகள் இடம்பெறாது. மேலும் இங்கு திருத்துவோர் நன்னோக்குடனேயே அதனைச் செய்கிறார்கள் என்பதும் நீங்கள் அறிந்ததே. தொடர்ந்து எழுதும்போது உங்களது மொழிநடையும் எழுத்துப் பிழைகள் இன்றி நேர்த்தியாக வரும். மேலும் மிகவும் வித்தியாசமான பல கட்டுரைகளும் தமிழுக்குக் கிடைக்கும். ஆதலால் உரையாடல்களைத் தவிர்த்து கட்டுரையாக்கத்தில் குறிப்பாகப் புதிய கட்டுரை ஆக்கத்தில் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி 17:10, 20 பெப்ரவரி 2007 (UTC)
செல்வா
"கூர்ப்பித்த" என்ற செயற்கையான பிறவினைச் சொல் வேறு. தொல்காப்பியர் "கூர்ப்பித்த" என்னும் சொல்லை ஆளவில்லை. உங்கள் சொல்லாட்சி தவறானது என்கிறீர்கள்
பல சொற்புணர்ச்சிகள் உ+இக்கும் என்ற அமைப்பிலுள்ளன.
உதாரணங்கள்
விளைவு+ இத்தல் = விளைவித்தல்
தீர்ப்பு + இத்தல் = தீர்ப்பித்தல்
சார்பு + இத்தல் = சார்ப்பித்தல்
ஏன் கூர்ப்பு + இத்தல் = கூர்ப்பித்தல் இருக்கக் கூடாது. இந்த இலக்கண ஆக்கம் சரி போல தோன்றுகிரது.
பார்க்க
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மூன்றாம் பாகம், பாடல்கள் (671- 1000)
"கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு போத்துக்க மானகுறை ...... யுடையேனைக் ....."
--விஜயராகவன் 00:09, 21 பெப்ரவரி 2007 (UTC)
இன்னும் சில உதாரணங்கள்
அறிவு + இத்தல் = அறிவித்தல்
தெரிவு + இத்தல் = தெரிவித்தல்
ஏற்று + இத்தல் = ஏற்றுவித்தல் (திருவாசகம் - நாய் சிவிகையேற்று வித்தல்.....)
ஊக்குவித்தல்
தோற்றுவித்தல் (தேவாரம் - தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் றுளங்காத.....) --விஜயராகவன் 10:54, 21 பெப்ரவரி 2007 (UTC)
செல்வா, இலக்கண விளக்கத்துக்கு மிகவும் நன்றி. சார்ப்பித்தல், தீர்ப்பித்தல் போன்ற சொற்களில் குழம்பி இந்த இல்லாத உ+இத்தல் விதியை நினைத்துப் பார்க்க மறந்து விட்டேன். விளை->விளைவி->விளைவு->விளைச்சல் என்ற சொற்தொகுதி சரி. விளைவு+இத்தல் என்று எதுவும் இல்லை :) ஹ்ம்ம் --Ravidreams 14:48, 21 பெப்ரவரி 2007 (UTC)
செல்வா, நான் செய்தது inductive reasoning. எந்த விஞ்ஞான முறையிலும் induction பெரும்பங்கு வகிக்கிரது. அதாவது ஒரு புனைகோளை, பல பல உதாரணங்கள் நிஜமாக்குமானால், அது ஒரு உண்மையை (அதன் வறம்புகளுடன்) தாபிக்கிரது. " உள் அறிவில்லாமல் உரையாட வந்தீர்கள்" என்கிறீர்கள். நாம் அறிவு என்பது, நடப்பு உண்மைகளை பரிசோதித்து, நிரூபிக்கக்கூடிய கோள்களை ஏற்பது.
நான் கூர்ப்பித்தல் என்பது தொல்காப்பியர் பயன்படுத்தினார் என்று எழுதவில்லை. நான் எழுதாததை வைத்து சாடுகிறீர்கள். 'கூர்ப்பு' இருந்து கூர்ப்பித்த வரலாம் என சொன்னேன், அவ்வளவுதான். நடப்பு என்பதிலிருந்து நடப்பித்தல் வரவில்லையா. நீங்கள் உறுதியாக சொல்வது நடப்பி > நடப்பித்தல். உஙகள் விளக்கத்தை நான் இப்பொழுது மறுக்க இல்லை. என் காரணம் தவறானாலும், முடிவு தவறா?
அருணகிரிநாதர் "கூர்ப்பித்த சூலம்" என்பது அப்பொருளில்தானே?
நான் எழுதியது சரியில்லை என்றாலும், எனக்கு கவயில்லை; நான் என் தவறுகள் மூலமாகவும் கற்பேனே தவிற, மற்றவர்கள் இட்டவழக்கினால் அல்ல. நான் இன்னும் தவறுகள் செய்யலாம்.--விஜயராகவன் 19:05, 21 பெப்ரவரி 2007 (UTC)
செல்வா, உங்கள் இலக்கண ஞானத்தை மதிக்கிறேன். நான் இலக்கண பிழைகளை செய்கிறேன் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நான் செய்யாதவற்றை என் மீது போடுகிறீர்கள். 'வேண்டுமென்றே பொல்லாங்கும் விசமத்தனம் ' 'இழிவு செய்யும்முக' என பலவாறு வசைபாடியுள்ளீர்கள்; முன்பு, நான் எதோ தமிழற்ற சொல்களை 'திணிப்பதாக' சொன்னீர்கள். இது ஒன்றும் சரியல்ல. நான் எல்லோரையும் மதிப்புடன் பேசி, தர உயர்வு ஏற்படுமாறு கருத்துகளை வைக்கிறேன்.த.வி. நடத்துதல் பேசிய பற்றிய பேச்செல்லாம், தர உயர்வு பற்றிதான். உதாரணமாக இன்றும் ஆலமரத்தில், தனிமனிதர் பிளாக்குகளின் துணை வேண்டாம் என்று சொல்லி, அதன் காரணங்களை சொல்லியுள்ளேன். இது பொறுப்பு இல்லை என்றால், எதுதான் அது. அதனால் உங்கள் வசைகளும், பொறுப்பு பற்றிய அறிவுரைகளும் மிகை என தோன்றுகிறது. எதிர்கால ஆய்வாளர் நான் எழுதியதைப் பார்த்து தவறான முடிவுக்கு வருவார் என்பது உங்கள் கற்பனை. எதிர்கால ஆய்வாளர் எப்படியெல்லாம் செய்யலாம் என்று நினைத்து, நாம் போக்கை மாற்றமுடியாது. I'll do my best today, you can do your worst tomorrow எனதான் கருதுகிறேன். உங்கள் தர்க்க யுக்திகள் ஆச்சரியமாக உள்ளது ; வசை பாடுவது நீங்கள்; ஆனால் "பொல்லாங்கும் ,விசமத்தனம் ' 'இழிவு செய்யும்முகம் செய்வது' மற்றவர்கள். மற்றவர்கள் சொற்களை நிறைய மாற்றுவது நீங்கள் - ஆனால் 'திணிப்பு' பழி மற்றவர்கள்மேல்.உங்கள் அறிவுரைகளை நீங்கள் கொஞ்சம் ஏற்றால் சாலச்சிறந்த்து.
ஏதோ கூகிளிலும், மற்ற இணைகளிலும் நமக்கு வேண்டிய தகவல் தேடக்கூடாது போல சொகிறீர்கள். இதில் தவறே இல்லை. பல தமிழிலக்கியம் இணையில் அகப்படுகிரது. அதனால், நமது இலக்கண அறிவை வளர்த்த இணை துணையாகும். த.வி.யே அதைச் சார்ந்ததுதானே. அருணகிரியார் பற்றிய தளத்துக்கு சென்று, 'கூர்பித்திய' என்பதின் பொருளறிந்தேன்.
"கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு போத்துக்க மானகுறை ...... யுடையேனைக் ....."
என்பதற்க்கு பொருள்
".......ஆகாயத்தில் இருந்து கூர்மை கொண்ட சூலாயுதத்தை உடைய யமன் சூலத்தால் என்னைக் குத்தி என் ஆவியைக் கொண்டு போகின்ற துக்கமான ஒரு குறைபாட்டை உடைய என்னை, .......".
இலக்கணத்தை தமிழில்க்கியம் தரும் உதாரணங்களால் ஏற்பது/மறுப்பது தவறா?
உங்கள் கேள்விகளுக்கு
"முதலில் தொல்காப்பியர் கூர்ப்பித்த என்பதைக் சொல்லவில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள். " ஒத்துக் கொள்கிறேன்
"..பொருளற்ற உ+இத்தல் கொள்கை பினாத்தல் (அறியாது உளறுதல்) என ஒப்புக்கொள்ளுங்கள்" . இதில் பினாத்தலே இல்லை. நான் எற்கனெவே சொன்னாற்ப்போல், எண் அணுகுமுறை empirical, புறவயமானது. ஒரு மேற்கோள் சரியில்லையென்றால். அதனை விட்டுவிடுவேன். பலன் கொடுக்கும் மேற்கோளை எடுப்பேன். நீங்கள் சொல்லும் இலக்கணம் சரியென்றால், அதையே ஏற்ப்பேன்.
"கூகிள் தேடலில் பெறும் தொடர்களைக் கொண்டு செறிவான உள் அறிவில்லாமல் உரையாட வந்தீர்கள் எனவும் ஒப்புக்கொள்ளுங்கள்" உங்கள் வசைபாடுதலை 'சாமர்த்தியம்' என்று தவறாக கருதுகிறீர்கள்.--விஜயராகவன் 19:34, 22 பெப்ரவரி 2007 (UTC)
இங்கு பலரும் தமிழ் மாணவர்களே. ஆனால், நீங்கள் சற்று கூடிய கவனம் எடுத்து எழுதினால் நன்று என்று எனக்கே தோன்றுகின்றது. தயவுசெய்து பலரின் வேண்டுகோளை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
அத்தோடு, கட்டுரை ஆக்கத்தில் கவனம் செலுத்தினாலும் நன்று. வரம்புக்கு மேல் இழுப்பறி செய்வது அவ்வளவு ஆரோக்கியமாக தெரியவில்லை.
நன்றி. --Natkeeran 17:01, 22 பெப்ரவரி 2007 (UTC)
தட்டச்சுப் பிழைகள் புரிந்து கொள்ளத்தக்கவை. ஆனால், தாபிக்கிரது, வகிக்கிரது போன்று நீங்கள் விடும் பிழைகள் பெரும் பிழைகள். இவை தட்டச்சுப் பிழை அல்ல. தமிழ் எழுதத் தெரியாததால் வரும் பிழை. இங்கு உரையாடுபவர் ஒவ்வொருவரின் தகுதியையும் நாங்கள் மேற்கோள் காட்டுபவர்களின் தகுதியையும் விமர்சிக்கும் நீங்கள் முதலில் ஒரு கலைக்களஞ்சியத்தில் எழுதத் தக்க அளவு பிழையில்லாமல் தமிழை கற்பது நன்று. நீங்கள் என்று வேண்டுமானாலும் பிழை மேல் பிழை விட்டு தமிழ் பழகலாம். ஆனால், தமிழ் விக்கிப்பீடியா அதற்கான இடம் இல்லை. கூகுள் தேடல் படம் காட்டத் தான் உதவும். தமிழ் கற்க அல்ல. அதனால், நல்ல தமிழாசிரியராகப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். நிறைய தமிழ் நூல்கள் படியுங்கள் (அகராதிகளை அல்ல). நீங்கள் மேற்கோள் காட்டும் எந்த ஒரு நூலையும் நீங்கள் முழுமையாகப் படித்திருந்தால் நிச்சயம் இது போன்ற பெரும் பிழைகள் வராது. பிணத்தை அறுத்துப் பார்த்து மருத்துவம் கற்கலாம். ஆனால், உயிருள்ளவனை அறுத்துப் பார்த்து தான் மருத்துவம் கற்பேன் என்றால் என்ன வாதம்? தமிழ் விக்கிப்பீடியாவின் மாற்றங்கள் உடனுக்குடன் வாசகர்களால் படிக்கப்படுபவை. நீங்கள் விடும் பிழைகள் தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டு மொத்த தரத்துக்கும் இழுக்காக அமையும். இது வரை எந்த ஒரு பயனரிடமும் நான் இப்படி கடும் சொல் பயன்படுத்தியதில்லை. எனவே மன்னிக்கவும். ஆனால், தமிழ் விக்கிப்பீடியா தவிர வேறெந்த ஒரு தமிழ் மன்றத்திலும் இவ்வளவு நாட்கள் யாரும் உங்களுடன் பொறுமையாக உரையாடி இருக்க மாட்டார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி.--Ravidreams 17:56, 22 பெப்ரவரி 2007 (UTC)
ரவி, மற்றவர்களுக்கு
"நீங்கள் விடும் பிழைகள் தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டு மொத்த தரத்துக்கும் இழுக்காக அமையும்." . இதுதான் உங்கள் கருத்தென்றால் சில காலம், நான் ஒன்றும் எழுதவில்லை. மற்றவர்கள் எழுதுவதை பார்க்கிறேன்.--விஜயராகவன் 19:41, 22 பெப்ரவரி 2007 (UTC)
பேச்சுப் பக்கங்களில் நீங்கள் விடும் பிழைகளையும் சேர்த்தே சொன்னேன்--Ravidreams 19:44, 22 பெப்ரவரி 2007 (UTC)
விஜயராகவன், 'ஆரியர்' பக்கத்தைப் பார்த்தேன். அது ஒரு பெரிய project. தீர யோசித்துச் செய்ய வேண்டும். முயற்சிக்கிறேன். அப்பக்கத்திற்கு என் கவனத்தை ஈர்த்ததற்கு ந்ன்றி. --Profvk 15:16, 3 மே 2007 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:16, 21 சூலை 2011 (UTC)
நீங்கள் பங்களித்த ஆனந்த ரங்கம் பிள்ளை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மார்ச் 18, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.