பண்டத்தரிப்பு
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
பண்டத்தரிப்பு (Pandatherippu) என்பது இலங்கையில் வட மாகாணத்தில் யாழ்ப்பாண நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். இது வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டது. பண்டத்தரிப்பு நகரசபை அதனையண்டிய சில்லாலை, வடலியடைப்பு, காடாப்புலம், பனிப்புலம், காலையடி மற்றும் பிரான்பற்று (பிராம்பத்தை) ஆகிய சிற்றூர்களை உள்ளடக்கியது. பண்டத்தரிப்பு யா/146 (J/146) கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தனித்துவமான நிலப்பரப்பும் மக்கள்தொகையும் உடையதாக நகர கட்டமைப்புடன் காணப்படும் ஊர் ஆகும்.
பண்டத்தரிப்பு
Pandatharippu | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 9°46′23″N 79°58′03″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ பிரிவு | வலிகாமம் தென்மேற்கு |
1993ம் ஆண்டளவில் இலங்கை இராணுவ படையெடுப்பு காரணமாக பண்டத்தரிபில் வசித்துவந்த அனைவரும் முற்றிலுமாக இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. இந்தக்கால கட்டத்தில் பண்டத்தரிப்பு முழுமையாக பாழடைந்த நகரம் எனும் நிலைக்கு தள்ளப்படவிருந்தாலும், மக்கள் சிறிதுசிறிதாக மீண்டும் குடியேறியமையால் ஓரளவு பழைய நிலமைக்கு வந்துள்ளது