நேபாள புரட்சி, 1951
From Wikipedia, the free encyclopedia
நேபாள புரட்சி, 1951 (The revolution of 1951) (நேபாளி: सात सालको क्रान्ति), இதனை ஏழாண்டுப் புரட்சி (Sat Salko Kranti) என்றும் அழைப்பர். நேபாளத்தில் ராணா வம்சத்தின் பரம்பரை பிரதம அமைச்சர்களின் நேரடி ஆட்சியை ஒழிப்பதே இப்புரட்சியின் நோக்கமாகும். 1944ம் ஆண்டு முதல் நேபாளி காங்கிரஸ் கட்சி போன்ற அரசியல் கட்சிகள், பொதுமக்களின் ஆதரவுடன் நடைபெற்ற வலுவான ஏழாண்டுப் போராட்டத்தின் விளைவாக, இறுதியில் நேபாளத்தில் ராணா வம்சத்தினரின் பரம்பரை பிரதம அமைச்சர் பதவி 15 பிப்ரவரி 1951 அன்று ஒழிக்கப்பட்டது.