நூரி அருவி
From Wikipedia, the free encyclopedia
நூரி அருவி (=நூரி சாம்ப்பு)(Noori Chamb) என்பது இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பூஞ்ச் ஆற்றின் தலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியாகும். இதற்கு முகலாய அரசி நூர் சகான் பெயரிடப்பட்டது.
நூரி அருவி Noori Chamb Waterfall | |
---|---|
சுற்றுலாத் தலம் | |
ஆள்கூறுகள்: 33.6086°N 74.4181°E / 33.6086; 74.4181 | |
நாடு | ![]() |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | பூஞ்ச் மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீடு | 185102 |
பூஞ்ச் மாவட்டத்தில் பிர் பஞ்சால் பாஸுக்கு (பீர் கி கலி) கீழே பஹ்ரம்கலா மலைக் கிராமத்திற்கு அருகில் நூரி சாம்ப்பு அமைந்துள்ளது. இது புஃப்லியாசிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனை அடுத்து முகலாய சாலைச் செல்கிறது.
இந்த இடம் முகலாய வரலாற்றுடன் தொடர்புடையது.[1][2] உள்ளூர் புனைவுகளின்படி, இந்த அருவிக்குப் பேரரசர் ஜஹாங்கீரின் மனைவி நூர் சஹானின் பெயரிடப்பட்டது. உள்ளூர் மொழியில் "சாம்ப்" என்பது நீர் வீழ்ச்சி ஆகும்.[3][4] காஷ்மீர் செல்லும் வழியில், நூர் சஹான் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பார்.[5][6][7]
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நூரி சாம்ப் 2வது மிக உயரமான நீர்வீழ்ச்சி மற்றும் சுற்றுலாத் தலமாக உள்ளது.[8][9][10][11]