![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d3/Flag_of_Nizari_Ismaili_state_%25281090-1162%2529.svg/langta-640px-Flag_of_Nizari_Ismaili_state_%25281090-1162%2529.svg.png&w=640&q=50)
நிசாரி இசுமாயிலி அரசு
வடமேற்கு ஈரான் மற்றும் சிரியாவிலிருந்த நிசாரி அரசு (1090-1273) / From Wikipedia, the free encyclopedia
நிசாரி அரசு என்பது ஒரு சியா நிசாரி இசுமாயிலி அரசு ஆகும். இதை அசன்-இ சபா என்பவர் அலமுத் கோட்டையை 1090ஆம் ஆண்டு கைப்பற்றியதற்குப் பிறகு நிறுவினார். இதற்குப் பிறகு "அலமுத் காலம்" என்று அழைக்கப்பட்ட இசுமாயிலியிய நம்பிக்கையின் காலம் தொடங்கியது. இந்த அரசின் மக்கள் அசாசின்கள் என்று அழைக்கப்பட்டனர்.
நிசாரி இசுமாயிலி அரசு | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1090–1273 | |||||||||||||||||||||||
இடது:1162 வரையிலான கொடி, வலது:1162க்குப் பிறகான கொடி | |||||||||||||||||||||||
தலைநகரம் | அலமுத் கோட்டை (பாரசீக அசாசின்கள், தலைமையகம்) மசையப் கோட்டை(சிரிய அசாசின்கள்) கில்கித் (தற்போதைய தலைமையகம்) | ||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீகம் (ஈரானில்)[1] அரபி (சிரியாவில்)[1] | ||||||||||||||||||||||
சமயம் | நிசாரி இசுமாயிலி சியா இசுலாம் | ||||||||||||||||||||||
அரசாங்கம் | முற்றிலும் இறையியல் முடியாட்சி | ||||||||||||||||||||||
பிரபு | |||||||||||||||||||||||
• 1090–1124 | அசன்-இ சபா | ||||||||||||||||||||||
• 1124–1138 | கியா புசுர்க்-உம்மித் | ||||||||||||||||||||||
• 1138–1162 | முகம்மத் இப்னு புசுர்க்-உம்மித் | ||||||||||||||||||||||
• 1162–1166 | இமாம் அசன் இரண்டாம் அலா திக்ரிகிசு சலாம் | ||||||||||||||||||||||
• 1166–1210 | இமாம் இரண்டாம் நூரல்தீன் அலா முகம்மது | ||||||||||||||||||||||
• 1210–1221 | இமாம் மூன்றாம் சலாலல்தீன் அசன் | ||||||||||||||||||||||
• 1221–1255 | இமாம் மூன்றாம் அலாவல்தீன் முகம்மது | ||||||||||||||||||||||
• 1255–1256 | இமாம் ருக்னல்தீன் குர்சா | ||||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | நடுக்காலம் | ||||||||||||||||||||||
• தொடக்கம் | 1090 | ||||||||||||||||||||||
• குலைவு | 1273 | ||||||||||||||||||||||
நாணயம் | தினார், திர்காம், மற்றும் பால்சு (ஒருவேளை)[2] | ||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | ஈரான் ஈராக்கு சிரியா பாக்கித்தான் | ||||||||||||||||||||||
முதன்மை மையங்களின் அமைவிடம் |
பாரசீகம் மற்றும் சிரியா முழுவதும் தொடர்ச்சியான காப்பரண்களை இந்த அரசு கொண்டிருந்தது. இந்தக் காப்பரண்களைச் சுற்றி இவர்களின் எதிரிப் பகுதிகள் இருந்தன. செல்யூக் பேரரசுக்கு எதிரான மக்களால் ஆதரவளிக்கப்பட்ட சிறுபான்மையின நிசாரி பிரிவினரின் மத மற்றும் அரசியல் இயக்கத்தின் விளைவாக இந்த அரசு உருவாக்கப்பட்டது. இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும், நிசாரிகள் தனித்து இயங்கக்கூடிய கோட்டைகள், வழக்கத்திற்கு மாறான உத்திகள், குறிப்பாக முக்கியமான எதிர்த் தலைவர்களைக் கொல்லுதல் மற்றும் உளவியல் போர்முறையைப் பின்பற்றி எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொண்டனர்.[3][4]:126 இவர்கள் ஒரு வலிமையான சமூக உணர்வையும், தங்களது தலைவருக்கு ஒட்டு மொத்த பணிவான பண்பையும் கொண்டிருந்தனர்.
தங்களுக்கு எதிர்ப்பைத் தந்த சூழ்நிலையில் எஞ்சிப் பிழைத்திருப்பதற்காக இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த போதிலும், ஒரு நுட்பமான வெளிப்புறப் பார்வை மற்றும் இலக்கிய மரபை இக்காலத்தில் இசுமாயிலிகள் வளர்த்துக் கொண்டனர்.
இந்த அரசு நிறுவப்பட்டு கிட்டத்தட்ட 2 நுற்றாண்டுகளுக்குப் பிறகு உட்புற ரீதியாக இந்த அரசானது வீழ்ச்சியடைந்தது. படையெடுத்து வந்த மங்கோலியர்களிடம் இதன் தலைமையானது அடி பணிந்தது. மங்கோலியர்கள் பல நிசாரிகளைப் பின்னர் படு கொலை செய்தனர். இவர்களைப் பற்றி அறியப்படும் தகவல்களில் பெரும்பாலானவை இவர்களது எதிரிகளால் எழுதப்பட்ட நூல்களில் உள்ள விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.[5]