நார்வே போர்த்தொடர்
From Wikipedia, the free encyclopedia
நார்வே போர்த்தொடர் (Norwegian Campaign) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நார்வே நாட்டில் நாசி ஜெர்மனிக்கும் நேச நாட்டுப்படைகளுக்கும் நிகழ்ந்த மோதல்களைக் குறிக்கிறது. இதில் ஜெர்மானியப் படைகள் வெற்றி பெற்று நார்வே நாட்டை ஆக்கிரமித்தன.
நார்வே போர்த்தொடர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் பகுதி | |||||||
ஜெர்மானியத் தரைப்படையினர் · நார்வீக் அருகே நார்வீஜிய பீரங்கிகள் · நார்வே அரசர் ஏழாம் ஹாக்கோன் மற்றும் பட்டத்து இளவரசர் ஐந்தாம் ஒலாஃப் · நார்வீக் அருகே ஜெர்மானியப் படையினர் · ஆசுக்கர்ஸ் போர்க் கோட்டை மீது குண்டுவீச்சு · |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஜெர்மனி | நோர்வே ஐக்கிய இராச்சியம் பிரான்சு |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜெனரல் நிக்லாசு வோன் ஃபால்கன்ஹோர்ஸ்ட் | ஜெனரல் கிரிஸ்டியான் லாக் (10 ஏப்ரல் வரை) ஜெனரல் ஓட்டோ ரூக் (10 ஏப்ரல் முதல்) |
||||||
பலம் | |||||||
~ 100,000[1] 9 டிவிசன்கள் 1 பீரங்கி பட்டாலியன் | மொத்தம்: ~ 93,000 நார்வே: 6 டிவிசன்கள்[2] ~ 55,000 பேர்[1] நேச நாடுகள்:[1] c. 38,000 |
||||||
இழப்புகள் | |||||||
5,296[3][4] | மொத்தம்: ~ 6,602[3] | ||||||
குடிமக்கள் இழப்புகள்:[3] ~. 400 பேர் கொல்லப்பட்டனர் |
நடுநிலை வகித்து வந்த நார்வே நாடு பல்வேறு காரணங்களால் அச்சு நாடுகள் மற்றும் நேச நாடுகளின் போர் முயற்சிக்கு அவசியமானதாக இருந்தது. இதனால் ஏப்ரல் 9, 1940ல் ஜெர்மானியப் படைகள் நார்வே மீது படையெடுத்தன. அவற்றை எதிர்கொள்ள நேச நாட்டுப்படைகளும் நார்வேக்கு அனுப்பப்பட்டன. இரு மாதகால சண்டைக்குப் பின்னர் தெற்கு நார்வே முழுவதும் ஜெர்மானியர்களால் கைப்பற்றப்பட்டது. வடக்கு நார்வேயில் சண்டை நிகழ்ந்து கொண்டிருந்த போதே, மேற்கு ஐரோப்பாவில் போர் மூண்டதால், அங்கிருந்த நேச நாட்டுப் படைகள் திருப்பி அழைக்கப்பட்டன. தனித்து விடப்பட்ட நார்வே ஜூன் 9ம் தேதி சரணடைந்தது.