நடுவண் தலைமைச் செயலகம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
நடுவண் தலைமைச் செயலகம் இந்திய அரசு செயற்படுவதற்கான பொறுப்பு வகிக்கிறது.[1] இது புது தில்லியிலுள்ள தலைமைச் செயலக கட்டிடத்திலிருந்து இயங்குகிறது. இந்தக் கட்டிடத்திலிருந்துதான் பெரும்பான்மையான அமைச்சர்கள் செயல்படுகின்றனர். இரைசினாக் குன்றில் இராஜ்பத்தின் இரு பக்கங்களிலும் கட்டப்பட்டுள்ள இரு கட்டிடத் தொகுதியாக இது அமைந்துள்ளது. இச்செயலகம் அமைச்சரவை செயலாளர் தலைமையில் இயங்குகிறது. இந்திய அரசின் அமைச்சகங்கள் நடுவண் தலைமைச் செயலகததில் செயல்படுகிறது.
விரைவான உண்மைகள் நடுவண் தலைமைச் செயலகம், அமைவிடம் ...
நடுவண் தலைமைச் செயலகம் | |
---|---|
அமைவிடம் | புது தில்லி |
புவியியல் ஆள்கூற்று | 28°36′54″N 77°12′21″E |
நியமன முறை | நிர்வாகத் தேர்வு (தகுதிகள் வரையறுப்பு) |
அதிகாரமளிப்பு | இந்திய அரசியலமைப்பு |
இருக்கைகள் எண்ணிக்கை | 32 |
வலைத்தளம் | http://cabsec.nic.in/ |
அமைச்சரவை செயலாளர் | |
தற்போதைய | அஜித் சேத் |
பதவியில் | சூன் 14, 2011 |
மூடு