தேனி. மு. சுப்பிரமணி
From Wikipedia, the free encyclopedia
மு. சுப்பிரமணி உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
தேனி. மு. சுப்பிரமணி (Theni M. Subramani) தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரத்தைச் சேர்ந்த ஓர் தமிழ் எழுத்தாளராவார்.[2] எம் சுப்பிரமணி என்ற இயற்பெயரிலும் முத்துக்கமலம், தாமரைச்செல்வி என்ற புனைப்பெயர்களிலும் தமிழில் வெளியாகும் பல அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் துணுக்குகள் (குறுந்தகவல்கள்) மற்றும் நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றை எழுதிவருகிறார்.[3] கட்டுரைகள், பேட்டிக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது படைப்புகள் பல இதழ்களிலும் இணையத்திலும் வெளியாகி உள்ளன. சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா என்ற நூலுக்கு தமிழ்நாடு அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான கணினியியலில் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளது.[4]
விரைவான உண்மைகள் தேனி. மு. சுப்பிரமணி, பிறப்பு ...
தேனி. மு. சுப்பிரமணி | |
---|---|
![]() | |
பிறப்பு | மு. சுப்பிரமணி மே 1, 1967[1] தூத்துக்குடி, தமிழ்நாடு, ![]() |
இருப்பிடம் | பழனிசெட்டிபட்டி, தேனி |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | தேனி எம். சுப்பிரமணி, முத்துக்கமலம் |
கல்வி | இதழியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | எஸ். முத்துசாமி பிள்ளை (தந்தை), கமலம் (தாய்) |
வாழ்க்கைத் துணை | உ. தாமரைச்செல்வி |
பிள்ளைகள் | முத்துக்கமலம் (மகள்) |
உறவினர்கள் | சகோதரர்கள் -2, சகோதரி -1 |
விருதுகள் | தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது |
வலைத்தளம் | |
http://muthukamalam.com http://thenitimes.com |
மூடு