தேசிய வீரதீர விருது
From Wikipedia, the free encyclopedia
இந்தியச் சிறாருக்கான தேசிய வீரதீர விருது (National Bravery Award for Indian Children) ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசும்[1] மற்றும் சிறார் நலத்திற்கான இந்திய மன்றமும் (ICCW) இணைந்து பல இடர்களின் இடையிலும் வீரமாகச் செயல் புரிந்த இந்தியச் சிறாருக்காக வழங்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் விருது குறித்தத் தகவல் ...
தேசிய வீரதீர விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | குடியியல் | |
பகுப்பு | 16 அகவைக்குட்பட்ட சிறுவர்/சிறுமியர் | |
நிறுவியது | 1957 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2011 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 800 சிறார்கள் (568 சிறுவர்களும் 232 சிறுமியரும்) | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு |
மூடு
பதினாறு அகவைக்குட்பட்ட 24 சிறாருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் 1978ஆம் ஆண்டு தங்களைக் கடத்தியவர்களுடன் போராடி உயிர்விட்ட சோப்ரா குழந்தைகள் நினைவாக ஓர் சிறுவனுக்குத் தரப்படும் சஞ்சய் சோப்ரா விருதும் ஓர் சிறுமிக்குத் தரப்படும் கீதா சோப்ரா விருதும் குறிப்பிடத்தக்கன.[2]. இந்த விருதுகளில் உயரியனவாக 1987ஆம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படும் பாரத் விருதும் 1988ஆம் ஆண்டிலிருந்து கொடுக்கப்படும் பாபு கயதானி விருதும் கருதப்படுகின்றன.