தெற்கு மண்டலக் குழு
From Wikipedia, the free encyclopedia
தெற்கு மண்டல குழு (Southern Zonal Council) என்பது ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு மண்டலக் குழுவாகும்.
அந்தமான் மற்றும் நிகோபா் தீவுகள், லட்சத் தீவுகள் போன்றவை இந்த குழுவில் உறுப்பினராக இல்லை.[1] இருப்பினும், அவர்கள் தற்போது தென் மண்டல சபைக்கு சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளனர்.[2]
ஓர் ஆலோசனை குழுவுடன் இந்திய மாநிலங்கள் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கிடையே விரைவான ஒத்துழைப்பை ஏற்படுத்த ஆலோசனைகள் வழங்கி செயல்படுவது இக்குழுவின் நோக்கமாகும். 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதியின் படி, ஐந்து மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டன.[3][4][1]