தென்னிந்தியத் திருச்சபை
From Wikipedia, the free encyclopedia
தென்னிந்தியத் திருச்சபை (Church of South India) என்னும் கிறித்தவ சபைப் பிரிவு இங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கிறித்தவ சபை அமைப்பாகத் திகழ்கிறது. இது தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதாடிஸ்ட், பிரெஸ்பிட்டேரியன் மற்றும் புராட்டஸ்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்களை இணைத்து அமைக்கப்பட்டது.
![]() | இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
தென்னிந்தியத் திருச்சபை (Church of South India) | |
![]() | |
தென் இந்திய திருச்சபையின் முத்திரை. | |
வகைப்பாடு | பிராட்டஸ்டன்ட் |
---|---|
இறையியல் | ஆங்கிலிக்கம் |
குமுகம் | எபிஸ்கோபல் |
நெறியாளர் | பிரதமப் பேராயர் ஆபிரகாம் உமன் (Abraham Oomen) |
சங்கங்கள் | ஆங்கிலிக்க ஒன்றியம், திருச்சபைகளின் உலக மன்றம், சீர்திருத்த சபைகளின் உலகக் கூட்டணி, ஆசியாவின் கிறித்தவ இணையம், இந்தியத் திருச்சபைகளின் ஒன்றியம், இந்தியத் திருச்சபைகளின் தேசிய மன்றம் |
புவியியல் பிரதேசம் | ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளா, தமிழ் நாடு, மற்றும், இலங்கை. |
ஆரம்பம் | செப்டம்பர் 27 1947 சென்னை, தமிழ் நாடு |
Merge of | ஆங்கிலிக்கன், பிராட்டஸ்டன்ட், மெதடிசம், பிரிஸ்பிட்டேரியன், மற்றும், பாப்டிஸ்ட் |
பிரார்த்தனைக் கூட்டங்கள் | 14,000 [1] |
உறுப்பினர்கள் | நான்கு மில்லியன்[1] |
மறை பரப்புனர்கள் | 1,214 [2] |
மருத்துவமனைகள் | 104 [1] |
உயர்நிலைப் பள்ளிகள் | 2000 பள்ளிகள், 130 கல்லூரிகள் |
இயேசு, தம்மை ஏற்று நம்பிக்கை கொள்கின்ற மக்களிடையே நிலவ வேண்டிய ஒன்றிப்பை வலியுறுத்தி உரைத்த கீழ்வரும் சொற்கள் தென்னிந்தியத் திருச்சபை உருவாவதற்கு உந்துதலாக அமைந்தன:
“ | எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும் (யோவான் 17:21) | ” |
"அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக" (That they all may be one) என்னும் விவிலியக் கூற்று தென்னிந்தியத் திருச்சபையின் விருதுவாக்காகவும் உள்ளது.