திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
சைவசமயக் குரவர் நால்வரில் ஒருவர் மற்றும் தேவார பாடிய மூவரில் முதலாமவர் / From Wikipedia, the free encyclopedia
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்), அல்லது சம்பந்தர், என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று (நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவருடைய வேறு பெயர்கள் சம்பந்தர், காழி வள்ளல்,[1][2] ஆளுடைய பிள்ளையார், பாலாராவயர், பரசமய கோளரி என்பனவாகும். இவர் கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.[3][4] சம்பந்தர் தனது பதினாறு வயதில் இறந்தார். இவரது பாடல்கள் திருமுறையின் முதல் மூன்று தொகுதிகளில் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தின் தத்துவ அடித்தளத்தின் ஒரு பகுதியாக அவை உள்ளன.[4][5]
திருஞானசம்பந்தர் | |
---|---|
பிறப்பு | சீர்காழி |
இயற்பெயர் | ஆளுடைய பிள்ளை |
தலைப்புகள்/விருதுகள் | நாயன்மார், மூவர் |
தத்துவம் | சைவ சமயம் பக்தி நெறி |
நால்வர் | |
---|---|
தலைப்புகள்/விருதுகள் | நாயன்மார், சமயக்குரவர் |
தத்துவம் | சைவ சமயம் பக்தி நெறி |
பொ.ஊ. ஆறாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அறுபத்து மூன்று நாயனார்களில் இவர் மிகவும் முக்கியமானவர். இவர் அப்பரின் சமகாலத்தவர்.[6]