![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
திருச்செந்தூர்
தமிழ்நாட்டிலுள்ள ஒரு கடற்கரை நகரம் / From Wikipedia, the free encyclopedia
திருச்செந்தூர் (ஆங்கிலம்:Thiruchendur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
திருச்செந்தூர் | |
— இரண்டாம் நிலை நகராட்சி — | |
அமைவிடம் | 8°29′41″N 78°07′19″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
வட்டம் | திருச்செந்தூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | திருச்செந்தூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
32,171 (2011[update]) • 3,064/km2 (7,936/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
10.5 சதுர கிலோமீட்டர்கள் (4.1 sq mi) • 32 மீட்டர்கள் (105 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/tiruchendur |
இந்நகராட்சியில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளன.
திருச்செந்தூர் நகராட்சி, மாவட்ட தலைநகரான தூத்துக்குடியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 52 கி.மீ. தொலைவிலும் உள்ளது. திருச்செந்தூர் தொடருந்து நிலையம் 0.5 கி.மீ. தொலைவில் உள்ளது. மதுரை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 173 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 8,271 வீடுகள் கொண்ட இந்த நகராட்சியின் மக்கள்தொகை 32,171 ஆகும்.[4][5]
10.5 ச.கி.மீ. பரப்பும், 21 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]