![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/95/May_1998_Trisakti_incident.jpg/640px-May_1998_Trisakti_incident.jpg&w=640&q=50)
திரிசக்தி அருங்காட்சியகம், ஜகார்த்தா
இந்தோனேசிய மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
திரிசக்தி அருங்காட்சியகம் (Trisakti Museum) அல்லது மே 12 சோக அருங்காட்சியகம் (May 12 Tragedy Museum) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அருங்காட்சியகமாகும். இது ஒரு மனித உரிமை அருங்காட்சியகமாகும் . இந்தோனேசிய மாணவர்கள் திரிசக்தி பல்கலைக்கழகத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஈடுபட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட செயலினையும் அவர்களுடைய பங்கினையும் இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளது.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/95/May_1998_Trisakti_incident.jpg/640px-May_1998_Trisakti_incident.jpg)
மே 12, 1998 ஆம் நாளன்று சுடப்பட்ட நான்கு மாணவர்களைப் பற்றி இந்த அருங்காட்சியகம் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறது. அருங்காட்சியகத்தில் சிறிய கட்டுரைகள், செய்தித்தாள்கள், ஆபரணங்கள், ஆர்ப்பாட்டம் தொடர்பான புகைப்படங்கள், இறந்தவரின் புகைப்படங்கள் மற்றும் அவற்றின் நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றின் செய்திகளின் தொகுப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2]