தளிச்சேரி
சேழர் காலத்தில் கோயில்களில் பணியாற்றிய இசை, நடணக் கலைஞர்களுக்கான குடியிருப்பு / From Wikipedia, the free encyclopedia
தளிச்சேரி என்பது சோழர் காலத்தில் இருந்த ஆடல்வல்லார்கள் இருந்த குடியிருப்புப் பகுதியாகும்.
முதலாம் இராஜராஜன் காலத்தில் சோழ மண்டலம் முழுவதிலும் உள்ள நடன மற்றும் இசைக்கலைஞர்கள் ஆதரிக்கப்பட்டனர். கோவிலின் அருகில் இவர்களுக்கு வீடுகள் உருவாக்கப்பட்டன. இப்பகுதிகள் தளிச்சேரி எனப்பட்டது. இராசராசன் காலத்தில் இருந்த 400 நடனக் கலைஞர்கள் பெயர்கள் பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.[1][2] மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட நிலம் (பங்கு) பற்றியும் குறிப்பிடுகிறது.