![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/88/Ptolemy%2527s_Map_of_Taprobane.jpg/640px-Ptolemy%2527s_Map_of_Taprobane.jpg&w=640&q=50)
தப்ரபேன்
From Wikipedia, the free encyclopedia
தப்ரபேன் அல்லது தப்ரொபானா (Taprobana) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஓர் தீவின் வரலாற்றுப் பெயராகும். கிரேக்கப் புவியியலாளரான மெகஸ்தெனஸ் என்பவர் கிட்டத்தட்ட கி.மு. 290 இல் ஐரோப்பியர்களுக்கு இது குறித்து முதன் முதலில் தெரியப்படுத்தினார். பின்னர் இது தொலெமியின் நூலில் ஆசியாக் கண்டத்துக்குத் தெற்கில் இருப்பதாகக் காட்டப்பட்ட ஒரு பெரிய தீவைக் குறிக்கப் பாவிக்கப்பட்டது.[1] இப் பெயர் 1602 இல் எழுதப்பட்ட தொம்மாசோ கம்பனெல்லாவின் சிவிட்டாஸ் சோலிஸ் (Tommaso Campanellas Civitas Solis) என்னும் நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/88/Ptolemy%27s_Map_of_Taprobane.jpg/640px-Ptolemy%27s_Map_of_Taprobane.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/85/Ptolemy%27s_Taprobana.jpg/640px-Ptolemy%27s_Taprobana.jpg)
இப்பெயரால் தொலமியின் நிலப்படத்தில் குறிக்கப்படும் தீவு எது என்பது நீண்ட காலமாகத் தெளிவில்லாத ஒன்றாகவே இருந்து வந்தது. தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தப்ரபேன் என அடையாளம் காணப்பட்ட இடங்களுள் பின்வருவன அடங்கும்:
- இலங்கை, தொலெமியின் வரைபடத்தில் உள்ளபடி.
- சுமாத்திரா,
- ஒரு பொய்த்தீவு
தப்ரபேன், லூயிஸ் டி கமோஸ் (1524–1580) என்பவர் எழுதிய ஒஸ் லூசியாடாஸ் என்னும் போர்த்துக்கேய இதிகாசக் கவிதையின் முதற் பகுதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.