டொமிங்கோ பயஸ்
From Wikipedia, the free encyclopedia
டொமிங்கோ பயஸ் (Domingo Paes) (16 ஆம் நூற்றாண்டு) என்பார் 1520 ஆம் ஆண்டில் விசயநகரப் பேரரசுக்கு வந்த ஒரு போத்துக்கீசப் பயணி ஆவார். விசயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பி பற்றி அவர் கொடுத்துள்ள விபரங்கள் இப் பழங்கால நகர் குறித்த பிற வரலாற்றுக் குறிப்புக்கள் எல்லாவற்றையும் விட கூடுதல் விபரங்களைத் தருபவை. இவர் பேரரசர் கிருட்டிண தேவ ராயர் ஆட்சிக் காலத்தில் விசயநகரப் பேரரசுக்கு வந்தார்.