டேவிட் மெக்லிலேண்ட்
From Wikipedia, the free encyclopedia
டேவிட் கிளேரென்சு மெக்லிலேண்ட் (David Clarence McClelland) (மே 20, 1917 – மார்ச் 27, 1998) ஒரு அமெரிக்க உளவியலாளர் ஆவார். இவர் அடைவூக்கம் தொடர்பான இவரது கோட்பாட்டிற்காக நன்கறியப்பட்டவர். இவர் 1950 களில் பல அறிக்கைகளை வெளியிட்டதோடு 1990 களில் பொருள் கிளைக்கறிச் சோதனை தொடர்பான புதிய மதிப்பிடும் முறை மற்றும் அதன் வழித்தோன்றல்களையும் உருவாக்கினார். [1] மெக்லிலேண்டு அடைவூக்கம் பற்றிய கோட்பாட்டிற்காக மிகவும் பாராட்டப்பெற்றார். இந்தக் கோட்பாடானது "சாதனை புரியத் தேவையானவை" அல்லது n-அடைவுக் கோட்பாடு என அழைக்கப்பட்டது.[2] பொது உளவியல் குறித்த பார்வை என்ற காலாண்டு இதழ் 2002 ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வொன்றில் 20 ஆம் நூற்றாண்டில் அதிகம் குறிப்பிடப்பட்ட உளவியலாளர்கள் வரிசையில் டேவிட் மெக்லிலேண்ட் 15 ஆம் இடத்தைப் பிடித்துள்ளதாகத் தரப்படுத்தியுள்ளது. [3]