![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/15/Temple_Of_Vishveshwur_Benares_by_James_Prinsep_1834.jpg/640px-Temple_Of_Vishveshwur_Benares_by_James_Prinsep_1834.jpg&w=640&q=50)
ஞானவாபி பள்ளிவாசல் வழக்கு
From Wikipedia, the free encyclopedia
ஞானவாபி பள்ளிவாசல் வழக்கு, இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வாரணாசி நகரத்தில் அமைந்த காசி விஸ்வநாதர் கோயிலின் ஆதி சுயம்பு ஜோதிர்லிங்கம் ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள ஞானவாபி நீர்நிலையில் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். 1664-ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் உத்தரவால் காசி விஸ்வநாதர் கோயில் 2 செப்டம்பர் 1669 அன்று இடிக்கப்பட்ட இடத்தில் ஞானவாபி பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்த வளாகத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாராய்ச்சி செய்ய இந்துக்கள் விரும்புகிறார்கள். அதே நேரத்தில் முஸ்லிம்கள் அந்த இடத்தில் கோயில் இல்லை என மறுக்கின்றனர். இந்துக்களின் முக்கியமான கோயில் பகுதியும், ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மேலும் பள்ளிவாசல் வளாகத்தை கள ஆய்வு செய்யவும், ரேடார் ஆய்வு செய்யவும், வீடியோ பதிவு செய்யவும் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வளாகத்தை மீண்டும் இந்து தெய்வங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கில் கோரப்பட்டது. 1991-ஆம் ஆண்டில் இந்துக்கள் 3 முக்கிய கோரிக்கைளுடன் வாராணாசி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கோரிக்கைகள் பின்வருமாறு:
- 1 ஞான்வாபி நிலம் கோயிலின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும்.
- 2. ஞானவாபி பள்ளிவாசலின் தற்போதைய கட்டமைப்பு இடிக்கப்பட்டு இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- 3. ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் சுயம்புவாக உள்ள சிவலிங்கம் உள்ள இடத்தில் புதிய கோயிலை புனரமைக்க அனுமதிக்க வேண்டும். இதனை முஸ்லிம்கள் அதை தடுக்கக்கூடாது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/15/Temple_Of_Vishveshwur_Benares_by_James_Prinsep_1834.jpg/320px-Temple_Of_Vishveshwur_Benares_by_James_Prinsep_1834.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Kashi-gyanvapi_%281%29.jpg/640px-Kashi-gyanvapi_%281%29.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e6/Well_of_Knowledge_in_Benares.jpg/640px-Well_of_Knowledge_in_Benares.jpg)
25 செப்டம்பர் 1998 அன்று, ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தின் எந்த மதத்திற்கு சொந்தமாக இருந்தது என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின்படி, அயோத்தியை தவிர, பிற வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் 15 ஆகஸ்டு 1947 அன்று இருந்த நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், சர்ச்சைக்குரிய இடமான ஞான வாபி கிணறு அல்லது பள்ளிவாசல், காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியாக இருந்ததா என்பதை முதலில் தீர்மானிக்க நடவடிக்கை வேண்டும் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்தது. காசிவிஸ்வநாத் கோயிலுக்கு ஒரு பழங்கால வரலாறு இருப்பதாகவும், அது மக்களின் இந்து மத உணர்வுகளுடன் தொடர்புடையது என்றும் நீதிமன்றம் நம்பியது. எனவே இந்த சர்ச்சையை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறியது.
இந்த சர்ச்சைக்கு தீர்வு காண 2018-ஆம் ஆண்டில், ஞானவாபி பள்ளிவாசல் வளாகம் முழுவதையும் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்து தரப்பு கோரியது. அதே நேரத்தில் முஸ்லிம்கள் ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில், காசி விஸ்வநாதர் கோயிலின் பகுதி இல்லை என மறுக்கின்றனர். வாரணாசி மாவட்ட நீதிமன்றம சர்சச்சைகுரிய இடத்தில் அகழாய்வு செய்ய தீர்ப்பு வழங்கியது. ஞான வாபி பள்ளிவாசலில் அகழாய்வு செய்வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2018-ஆம் ஆண்டில் மீண்டும் விசாரணை தொடங்கியது. ஆனால் முஸ்லீம் தரப்பு மீண்டும் தடை உத்தரவை பெற்றது.
ஞானவாபி பள்ளிவாசலின் மேற்கு சுவரில் இந்து தெய்வங்களில் சிற்பங்கள், இந்து கட்டிட அமைப்புகள் இருப்பதை இந்துக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.