From Wikipedia, the free encyclopedia
சைனம் (ஆங்கிலம்: Jainism) அல்லது சமண சமயம் பாரம்பரியமாக சைன நெறி (जैन धर्म) என்று அறியப்படுகிறது, ஒரு பண்டைய இந்திய சமயமாகும் மற்றும் சமண நெறிகளுள் ஒன்றாகும். சமண சமயத்தின் மூன்று முக்கிய தூண்கள் அகிம்சை, அனேகாண்டவாதம் (பல தெய்வ வழிபாடு) மற்றும் அபரிகிரகா (பற்றின்மை) ஆகும்.
சைனக் கொடி | |
மொத்த மக்கள் தொகை | |
---|---|
ஏறக்குறைய 5 மில்லியன் | |
தோற்றுவித்தவர் | |
ரிசபநாதர் | |
குறிப்பிடத்தக்க மக்களை கொண்டுள்ள பகுதிகள் | |
இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஆங் காங், சப்பான், சிங்கப்பூர், பெல்சியம், கென்யா, ஐக்கிய இராச்சியம் | |
நூல்கள் | |
சைன ஆகமங்கள் | |
மொழிகள் | |
தமிழ், சமசுகிருதம், பிராகிருதம், குசராத்தி, இந்தி, கன்னடம் | |
மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரும்பாலான சைனர்கள் இந்துக்களாகக் கணக்கிடப்படுகிறார்கள் |
இந்நெறி, 24-ஆவதும், இறுதித் தீர்த்தங்கரரான மகாவீரரால் பொ.ஊ.மு. 6-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் சைனம் கொள்கை அடிப்படையில் திகம்பரம் மற்றும் சுவேதாம்பரம் என இரு பிரிவாக பிரிந்தது. இறைவனின் இருப்பு மற்றும் வேதங்களை ஏற்றுக் கொள்ளாத சமயங்களில் பௌத்தம் போன்று சைனமும் ஒன்றாகும். இது தமிழ் இலக்கியத்தில் வெறும் சமணம் என்று அழைக்கப்படுகிறது.
சைன சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களில் முதலாமவர் ரிசபதேவர். இறுதியானவர் மகாவீரர் ஆவார். தீர்த்தங்கரர்களின் உபதேசங்களை மக்களிடத்தில் பரப்பியவர்களை கணாதரர்கள் என்பர்.
திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் என்பது சைனத்தின் இரு பிரிவுகள் ஆகும்.
சைனம் எனும் சொல் சின = வென்றவன் எனும் வடமொழிச் சொல்லின் விருத்தி என்ற ஒலிமாற்றத்தால் பெற்ற சொல்லாகும் (சிவ > சைவ போல்). இதற்கு சினரின் வழி எனப் பொருள். மகாவீரர், தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தித் தன்னை வென்றவர் என்ற காரணத்தால், செயனா[1][2][3][4] எனும் பெயர்ப் பெற்றார். இதன் பொருள் வென்றவர் என்பதாகும். இவருடைய கருத்துக்களை செயனம் எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்களை செயனர் எனவும் அழைக்கப்பெற்றனர்[4]. இச்சொல், நாளடைவில் திரிந்து சைனர் என்றானது. மகாவீரர் ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றும், அவர் சைனம் எனும் ஒரு புதிய நெறியைத் தோற்றுவித்தவர் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. மகாவீரர் ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றால், மகாவீரருக்கு முன்பு இந்நெறி எப்பெயரில் அழைக்கப்பெற்றது என்பது கிடைக்கவில்லை.
தமிழ் இலக்கியங்களில் சைன நெறி பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. அவை,
சைன நெறியைப் பின்பற்றுபவர்களை சைனர், நிகண்ட வாதி, அருகர், ஆருகதர், சாதி அமணர்[8] என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவர்.
வைசாலி எனும் இடத்திற்கு அருகில் உள்ள குந்தி கிராமா என்ற ஊரில் சித்தார்த்தர், திரிசலை ஆகியோருக்குப் பிறந்த மகாவீரரால் இந்தச் சமயம் தோற்றுவிக்கப்பெற்றது. இவரின் இயற்பெயர் வர்த்தமானர். இவர் மகள் பெயர் அனோசா. சகோதரர் நந்தி வர்த்தனார். இவர் யசோதா எனும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்திக்கொண்டிருந்த பொழுது, யாகம், சாதிக் கொடுமை போன்றவற்றைக் கண்டு மனம் வெறுத்து, துறவறம் பூண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் உடைதுறந்து, பிச்சையெடுத்து உண்டு துறவற வாழ்வினை மேற்கோண்டார். இரிசிபாலிகா எனுமிடத்தில், நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மக்களுக்குப் போதித்தார். மக்கள் இவரை செயனா என்று அழைத்தனர். இதன் பொருள் வென்றவர் என்பதாகும். இவருடைய கருத்துக்கள் செயனம் எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் செயனர் எனவும் அழைக்கப்பெற்றனர்.[4] இவருக்கு வழங்கிய வேறு பெயர்கள் கைவல்யர், மகாவீரர், செயனர், நிர்கிரந்தர் ஆகும்.
பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சந்திரகுப்த மோரியர்(மௌரியர்), ஆசீவக நெறியை பின்பற்றிய தன் மகனான பிந்துசாரரிடம்[9][10][11] ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட சில காலத்திற்கு பின்பு, சைன நெறியைத் தழுவினார். சந்திரகுப்த மோரியரின் அரசகுருவாக இருந்த பத்திரபாகு முனிவர் என்பவர் காலத்தில் சைன நெறி தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். பத்திரபாகு முனிவர், சந்திரகுப்த மோரியருடன் இந்தியாவின் வடப்பகுதியிலிருந்து பன்னீராயிரம் சைன முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்னகம் நோக்கி வந்தார். இவர், மைசூர்(எருமையூர்) அருகேயிருக்கும் சமணவெள்ளைக்குளம் (எ) சிரவணபௌகொளவில் தம் குழுவுடன் தங்கினார். இவருடைய சீடரான விசாக முனிவர், சோழ பாண்டிய நாடுகளில் சைனம் பரவ வழிவகை செய்தார். இவ்வாறு இந்திய வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த சைன நெறி பற்றி, கதா கோசம் எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்திரபாகு முனிவரின் காலம் பொ.ஊ.மு. 317 முதல் பொ.ஊ.மு. 297 என்பதால் சைனம் தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாழ 2300 ஆண்டுகள் பழமையானது.[12]
பண்டைய தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியில் பொ.ஊ. 470ல் பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்பவர் திரமிள சங்கம் எனும் சைனர்களின் சங்கத்தை மதுரையில் நிறுவினார். இதனை, தர்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் குறிப்பிடுகிறார். இச்சங்கத்தின் நோக்கம், சைன நெறியைப் பரப்புவதும், சைன நெறிக் கொள்கைகளை விளக்கக் கூடிய நூல்களைத் தோற்றுவிப்பதுமாக இருந்தது. இதனை, நான்காம் தமிழ்ச் சங்கம் என்று கூறுவர்[13][14][15]. ஆனால், இந்தச் சங்கம் பாண்டியர் நிறுவித் தமிழை ஆராய்ந்த தமிழ்ச் சங்கம் போன்றது அல்லாமல் சைன சமயக்கருத்துக்களை பரப்ப உருவாக்கப்பட்ட சங்கம் என்று மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள் தான் இயற்றிய சமணமும் தமிழும் எனும் நூலில் கூறுகிறார்.[16]
சைன நெறியை பரப்பும் நோக்குடன் பண்டைய தமிழகம் வந்த சைன நெறியினர், காப்பியங்கள் மற்றும் புராணங்கள் இயற்றாமல் காலப்போக்கில் அழிந்த நெறிகளைப் போல இல்லாமல், பௌத்த மற்றும் வைதீக நெறிகளுடன் போட்டியிட்டுக் கொண்டு காப்பியங்கள் மற்றும் புராணங்கள் மூலம் தங்கள் நெறியைப் பரப்பினர். சைனர்கள் இயற்றிய காப்பியங்கள் மற்றும் நூல்களாவன:
திவாகர முனிவரால் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, சைனர்களை (அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.
சாவகர் அருகர் சமணர் ஆகும்; ஆசீ வகரும் அத்தவத் தோரே - திவாகர நிகண்டு
அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் சைனர்களை (அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.
சாவகர் அருகர் சமணர் அமணர் ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே - ஐயர் வகை, பிங்கல நிகண்டு
இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி,
இதன்மூலம், சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம் மற்றும் சாவகம் ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள சைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள சைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் சைனத்தின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு சைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.
இந்தக் குழப்பத்தினால், இன்றுவரை, தமிழ் இலக்கியங்களின் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில், சமணர் மற்றும் சைனர் ஆகிய சொற்கள், ஒரேப் பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது,
ஆகிய கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள், ஆசீவக நெறியையும் சைன நெறியையும் பிரித்துக் காட்டுகின்றன. பிறகு, பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆசீவக நெறி சைன நெறியின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது. இதற்கான சான்றாக,
ஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள், தான் இயற்றிய பௌத்தமும் தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.[20]
மகாவீரர், தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தித் தன்னை வென்றவர் என்ற காரணத்தால், செயனா[1][2][3][4] எனும் பெயர்ப் பெற்றார். இதன் பொருள் வென்றவர் என்பதாகும். இவருடைய கருத்துக்களை செயனம் எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்களை செயனர் எனவும் அழைக்கப்பெற்றனர்[4]. இச்சொல், நாளடைவில் திரிந்து சைனர் என்றானது. மகாவீரர் ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றும், அவர் சைனம் எனும் ஒரு புதிய நெறியைத் தோற்றுவித்தவர் என்றும் இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. மகாவீரர் ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றால், மகாவீரருக்கு முன்பு இந்நெறி எப்பெயரில் அழைக்கப்பெற்றது என்பது கிடைக்கவில்லை.
சைன நெறியில் ஆடையணியாமல் உடலில் திருநீறு பூசியபடி இருக்கும் திகம்பரர்களும்[21], வெள்ளை ஆடையினை உடுத்தியிருக்கும் சுவேதம்பரர்களும் இரு ஆதிப்பிரிவினர் ஆவார்கள். இவர்களிலிருந்து கீழ்வரும் பிரிவுகள் பிற்காலத்தில் தோற்றம் பெற்றன.
சைன சமய இல்லறத்தார்களும் மற்றும் சைனத் துறவிகளும் பின்பற்ற வேண்டிய அறங்களை அனுவிரதம் என்றும் மகாவிரதம் என்று அடைவு செய்துள்ளது. விரதம் என்பது நோன்பினை குறிக்கும். வாழ்க்கையை ஒரு விரதமாக கடைபிடிக்க வேண்டும் என்பது மகாவீரரின் குறிகோள் ஆகும். இதனால்தான் இல்லறத்தாரைச் சாவகநோன்பிகள் என்றும் துறவறத்தாரை பட்டினி நோன்பிகள் [22] என்றும் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.
இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் என்ற நான்கு கொள்கைகளையும் சேர்த்து அகிம்சை என்கின்றனர். ”அகிஞ்சோ பரமொ தர்ம” என்பது மகாவீரரின் பொன்மொழியாகும். கொல்லாமையே மேலான அறம் என்பது இதன் பொருள். எந்த உயிருக்கும் எந்த வகையிலும் இம்சை செய்யாமையே அகிம்சை எனப்படும். சைன சமயத்தின் பன்னிரண்டு அங்க ஆகமங்களில் முதல் ஆகமம் ஆகிய ஆயாரங்க சுத்தத்தில் அகிம்சை எனப்படும் அறத்தினை மகாவீரர் போதித்துள்ளார். அதன் ஒரு பகுதியில் “ மனிதர்களே “, எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தவோ, வதைக்கவோ, கொல்லவோ கூடாது. பிறறை அவமதிப்பது கூட இம்சையாகும். ஆகவே அகிம்சை என்பது உயிர்க்கொலை புரியாமை மட்டும் அன்று; மன்னுயிர்க்கும் இன்னா செய்யாமையும், பிறறை அவமதிக்காமையும் அகிம்சை ஆகும். மனிதர்களே, நீங்கள் எடுத்துவரும் பல்வேறு பிறவிகளில், உங்களால் இம்சிக்கப்பெறும் உயிராகவும் நீங்களே பிறப்பெடுத்து இருப்பீர்கள்; ஆகவே, எல்லா உயிர்களையும் உங்கள் உயிர் போல மதித்து நடப்பதே அகிம்சையாகும், என்று மகாவீரர் அறிவுறுத்தியுள்ளார்.
எவ்வகை அறங்களுக்கும் மூலமாகவும் முதலாகவும் சுடர்விடுவது தயா எனப்படும் பெருங்கருணை ஆகும். இப்பேரருள் வாய்க்கப் பெற்றவர்கள் மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க மாட்டான். அனைத்துயிர்களையும் சம நோக்குடன் பார்ப்பான்.
மகாவீரரின் இரண்டாவது பேரறமாகத் திகழ்வது பொய் பேசாமை எனப்படும். இதனை ”அசத்தியத் தியாகம்” என்பர். சத்தியம் என்பது உண்மை. அசத்தியம் என்பது உண்மைக்குப் புறம்பாகிய பொய். தியாகம் என்பதற்கு கைவிட்டுவிடுதல் என்பது பொருள். எனவே அசத்தியத்தியாகம் எனில் பொய் பேசுவதை அறவே கைவிட்டுவிடுதல் என்று பொருள். மகாவீரர் வாய்மை அறத்தினை முழுமையாகப் பின்பற்றுவதற்கு ஐந்து வழிகள் அறிவித்துள்ளார்.
அகிம்சையும் சத்தியமும் அறமாகக் கொண்டு செயல் புரிவோர் பல்வேறு சித்திகளைப் பெறுவர் என்பது சைன சமயத்தின் நம்பிக்கை. காந்தியடிகளின் அறப்போராட்டத்திற்கு மகாவீரர் போதித்த அகிம்சையும் சத்தியமுமே இரு பெரும் ஆயுதங்களாக பயன்பட்டு வெற்றி தேடித் தந்தது.
மகாவீரரின் அறிவுரைகளில் மூன்றாவது அறமாகப் பேசப்படுவது அசுதேயம் ஆகும். சுதேயம் எனில் களவு. அசுதேயம் எனில் களவு புரியாமை எனும் கள்ளாமையாகும். கொல்லாமை அறத்தினால் பிற உயிர்களுக்கு தீங்கு புரியாமை குறித்த மகாவீரர் கள்ளாமை அறத்தினால் பிறர் உடைமைகளுக்கு தீங்கு நேராதபடி வாழவேண்டும் என வலியுறுத்துகிறார். எப்பொருளாக இருப்பினும், பிறர் கொடாத பொருளைக் கொள்ளுதல் கூடாது என்பதுதான் கள்ளாமையாகும்.
சைன நூல்களில் ஐந்து வகையாக கள்ளாமை விளக்கப்படுகிறது.
1 பிறர் இருக்கையில் தங்க முன்னிசைவு கேட்டல் 2 பெற்ற பிச்சையில் பங்குகொள்ள குருவின் இசைவு கேட்டல் 3 தங்குமுன் வீட்டின் உரிமையாளரின் இசைவினைப் பன்முறை வேண்டல் 4 ஆசனங்கள் மற்றும் பிறபொருட்களைப் பயன்படுத்த இசைவு கேட்டல் 5 மற்றொரு துறவிக்காக இவை வேண்டுதல்
காமம் இன்மை என்பது மகாவீரரின் மற்றொரு அறமாகும். தகாத ஆசையே மனிதன் துயரப்பட காரணமாகிறான். தனக்குரிய தலைவியைத் தவிர, பிறன் மனை வாழும் பெண்ணை மனதால்கூட தொடுதல் பாவம் என்று மகாவீரர் எச்சரித்தார்.
அவா அறுத்தல் என்பது மகாவீரரின் ஐந்தாம் அறமாகும். அவாவறுத்தல் என்பது ஆசையை குறிப்பதாகும். அவாவறுத்தல் (அவா + அறுத்தல்) ஆசையை துறத்தலாகும். ஆனால் அறநெறியில் பொருள் ஈட்டும்படியும், ஆனால் முறைகேடாக செல்வத்தை ஈட்டுவதை மகாவீரர் கண்டித்தார். எனவே, அளவாகவும், குறைவாகவும் பொருள் ஈட்ட வேண்டும், தேவைக்கு மேல் பொருள் ஈட்டக்கூடாது என்பது கருத்தாகும்.
தோன்றும் பொருட்கள் யாவும் ஒருநாள் அழியக்கூடியதே. எனவே உடல்நலமாக உள்ளபோதே வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை தரும் அறச்செயல்களை ஆற்றுதல் வேண்டும்.
ஒருவனின் செயல்களின் நுண்ணிய அணுக்களும் உயிருடன் ஒட்டியுள்ளன் என்பதும், அது இப்பிறவியிலோ அல்லது மறுபிறவிலோ விளைவினைத் தருவதற்குரிய காலம் வரும் போது அவை வெளிப்பட்டு இன்ப துன்பங்களை உண்டாக்கும். இவ்வினைக்கோட்பாட்டை, ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம் எனச் சிலப்பதிகாரம் செப்புதல் நோக்குதல் வேண்டும்.
ஒருவர் செய்த பாவத்திற்குப் பரிகாரம் உண்டு என வைதீக மதங்கள் கூறின. ஆனால் சைன சமயம், ஒருவர் மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் செய்த பாவத்தை இப்பிறவிலோ அல்லது மறுபிறவியிலோ அனுபவித்து தீர்ப்பது தவிர வேறு வழியில்லை எனக்கூறுகிறது. எனவே மனவடக்கம், சொல்லடக்கம் மற்றும் புலனடக்கத்துடன் வாழவேண்டும் என்று சைனம் அறிவுறுத்துகிறது.
கண்ணால் காணவும் கருத்தால் அறியபடுப்ப்டுகின்ற எல்லாப் பொருள்களையும் சீவன் என்றும் அசீவன் என்று இரு பெரும் பாகுபாட்டில் அடைவு செய்து ஆராய்ந்து உணர்த்திய சிறப்பு மகாவீரர்க்கு உண்டு. ஒரு அறிவு படைத்த உயிர்முதல் ஆறு அறிவு படைத்த மனிதன் வரை 1.சீவன் என்றும் மற்றவற்றை 2. அசீவன் பிரித்துக் கூறியவர். மற்ற ஏழு பதார்த்தங்களான 3.புண்ணியம், 4.பாவம், 5.ஊற்று எனும் ஆசுவரம், (உயிரில் வினைகள் ஊற்றேடுக்கும் என்றும் மனம், மொழி, செயல் ஆகிய மூன்றின் வாயிலாக உயிரிடம் வினைகள் ஊற்றுக்கள் சென்று சேருவது), 6.செறிப்பு (சம்வரை) எனும் தத்துவம் (இன்ப-துன்பங்களுக்கு காரணமான ஊற்றின் வழியை மூடுதல்), 7.உதிர்ப்பு எனும் நிருசரை (வாழ்க்கையை கடுந்தவம், தருமத்தியானத்தினால் கழிப்பது), 8.கட்டு (பந்தபாசத்திலிருந்து விடுபடுதல்), 9.வீடுபேறு.
தீர்த்தங்கரர்கள் வீடுபேறு பெற்று அனந்த சுகத்தில திளைத்திருக்கும் முற்றும் உணர்ந்த ஞானிகள். இவர்களையே வழிபடுதல் சைனர்களின் நெறியாகும். அன்றியும் அருகர், சித்தர், ஆச்சாரியார், ஆசிரியர் மற்றும் சாதுக்கள் எனும் ஐவரையும் பஞ்சப்பரமேட்டிகள் எனப் போற்றி வணங்குவர்.
வெண்தாமரைக்குளம் எனும் சிரவணபெளகுளாவில் அமைந்துள்ள சைனத்துறவியான பாகுபலியின் சிற்பம் சைனர்களில் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றது. இச்சிலை 57 அடி உயரமானதாக உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் சைனர்களின் பள்ளிகள் என்று அழைக்கப்பெறும் குகைகள் காணப்பெறுகின்றன. இவற்றில் சைனர்களின் கற்படுக்கைகள் உள்ளன. அத்துடன் இந்தியா முழுமையும் உருவ வழிபாட்டிற்காக அமைக்கப்பெற்ற கோவில்களும் சைனர்களின் கலையை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.