சைனம்
From Wikipedia, the free encyclopedia
சைனம் (ஆங்கிலம்: Jainism) அல்லது சமண சமயம் பாரம்பரியமாக சைன நெறி (जैन धर्म) என்று அறியப்படுகிறது, ஒரு பண்டைய இந்திய சமயமாகும் மற்றும் சமண நெறிகளுள் ஒன்றாகும். சமண சமயத்தின் மூன்று முக்கிய தூண்கள் அகிம்சை, அனேகாண்டவாதம் (பல தெய்வ வழிபாடு) மற்றும் அபரிகிரகா (பற்றின்மை) ஆகும்.
சைனக் கொடி | |
மொத்த மக்கள் தொகை | |
---|---|
ஏறக்குறைய 5 மில்லியன் | |
தோற்றுவித்தவர் | |
ரிசபநாதர் | |
குறிப்பிடத்தக்க மக்களை கொண்டுள்ள பகுதிகள் | |
இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஆங் காங், சப்பான், சிங்கப்பூர், பெல்சியம், கென்யா, ஐக்கிய இராச்சியம் | |
நூல்கள் | |
சைன ஆகமங்கள் | |
மொழிகள் | |
தமிழ், சமசுகிருதம், பிராகிருதம், குசராத்தி, இந்தி, கன்னடம் | |
மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரும்பாலான சைனர்கள் இந்துக்களாகக் கணக்கிடப்படுகிறார்கள் |
இந்நெறி, 24-ஆவதும், இறுதித் தீர்த்தங்கரரான மகாவீரரால் பொ.ஊ.மு. 6-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் சைனம் கொள்கை அடிப்படையில் திகம்பரம் மற்றும் சுவேதாம்பரம் என இரு பிரிவாக பிரிந்தது. இறைவனின் இருப்பு மற்றும் வேதங்களை ஏற்றுக் கொள்ளாத சமயங்களில் பௌத்தம் போன்று சைனமும் ஒன்றாகும். இது தமிழ் இலக்கியத்தில் வெறும் சமணம் என்று அழைக்கப்படுகிறது.
சைன சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களில் முதலாமவர் ரிசபதேவர். இறுதியானவர் மகாவீரர் ஆவார். தீர்த்தங்கரர்களின் உபதேசங்களை மக்களிடத்தில் பரப்பியவர்களை கணாதரர்கள் என்பர்.
திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர் என்பது சைனத்தின் இரு பிரிவுகள் ஆகும்.