![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/78/Chaitya_Bhoomi%252C_Mumbai_%25E2%2580%2593_Samadhi_place_of_Dr._Babasaheb_Ambedkar.jpg/640px-Chaitya_Bhoomi%252C_Mumbai_%25E2%2580%2593_Samadhi_place_of_Dr._Babasaheb_Ambedkar.jpg&w=640&q=50)
சைத்திய பூமி
From Wikipedia, the free encyclopedia
சைத்திய பூமி (Chaitya Bhoomi) (மகாபரிநிர்வான நினைவிடம்) என்பது ஒரு பௌத்த சைத்தியமும், இந்திய அரசியலமைப்பை கட்டியெழுப்பியவரான டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் தகன இடமுமாகும். இது மும்பையின் தாதர் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த சைத்திய பூமி என்பது அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களுக்கான புனித யாத்திரைக்கான இடமுமாகும். ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாள் விழாவில் (மகாபரிநிர்வான தினம்) ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான மக்கள் வருகை தருகிறார். [1] [2] [3]
![]() சைத்திய பூமி தாது கோபுரம் | |
ஆள்கூறுகள் | 19.026149°N 72.834599°E / 19.026149; 72.834599 |
---|---|
இடம் | தாதர், மும்பை, மகாராட்டிரம் |
வகை | தாது கோபுரம் |
திறக்கப்பட்ட நாள் | 5 திசம்பர் 1971 |
அர்ப்பணிப்பு | அம்பேத்கர் |
மகாராட்டிரா முதல்வர், ஆளுநர், அமைச்சர் மற்றும் பல அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 6 ஆம் தேதி சைத்திய பூமியில் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இதை பார்வையிட்டுள்ளார். [4] சைத்திய பூமி அம்பேத்கருக்கு ஒரு நினைவுச்சின்னத்தை வழங்குகிறது. மேலும் மகாராட்டிரா அரசாங்கத்தால் ஏ-வகுப்பு சுற்றுலா மற்றும் புனித யாத்திரைத் தளமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. [5]