செயலாக்க ஆணை 13769
From Wikipedia, the free encyclopedia
செயலாக்க ஆணை 13769 எனப்படுவது அமெரிக்க அரசத் தலைவர் டோனால்ட் டிரம்ப் 27 சனவரி 2017 அன்று கையெழுத்திட்ட செயலாக்க ஆணை ஆகும். இந்த ஆணையின்படி இராக், இரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தோர் ஐக்கிய அமெரிக்காவில் நுழைவதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டது. இந்த ஆணை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவை நோக்கி வந்துகொண்டிருந்த ஏதிலிகள் அனைவரும் வானூர்தி நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.[3]
விரைவான உண்மைகள் தொடர்புடைய சட்டம், சுருக்கம் ...
செயலாக்க ஆணை 13769 | |
---|---|
பென்டகன் அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் ஆணையில் ஒப்பமிடல்; துணை குடியரசுத் தலைவர் மைக் பென்சும் (இடது) பாதுகாப்புத்துறை அமைச்சர் சேம்சு மாட்டிசும் (வலது) உடனிருந்தனர். | |
தொடர்புடைய சட்டம் | |
குடிநுழைவு மற்றும் குடியுரிமைச் சட்டம் 1965 | |
சுருக்கம் | |
|
மூடு
தடையை ஐக்கிய அமெரிக்கா முழுமைக்குமாக தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சியாட்டிலில் உள்ள நீதியரசர் 3 பிப்ரவரி 2017 அன்று உத்தரவு பிறப்பித்தார்.[4]