சென்னையின் பாரம்பரியக் கட்டடங்கள்
From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது தலைமையிடமாக இருந்தது. இங்கு 2,467 பாரம்பரியக் கட்டடங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக அளவிலான பாரம்பரியச் சின்னங்கள் கொண்ட பெருநகரமாக உள்ளது.[1] சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.[2] கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே அதிக பாரம்பரியச் சின்னங்கள் சென்னையில் உள்ளன.[3] நீதிபதி பத்மநாபன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, அரசின் அதிகாரபூர்வமாக, இந்தப் பாரம்பரியக் கட்டடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.[4]