சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னையில் செயல்படும் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகம் / From Wikipedia, the free encyclopedia
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இஃது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857-இல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
சென்னைப் பல்கலைக்கழகம் | |
மெரினா கடற்கரையில் இருந்து பல்கலைக்கழகத்தின் பார்வை | |
குறிக்கோளுரை | கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Learning Promotes Natural Talent |
வகை | பொது |
உருவாக்கம் | 1857; 167 ஆண்டுகளுக்கு முன்னர் (1857) |
நிதிக் கொடை | $50 மில்லியன் |
வேந்தர் | ஆர். என். ரவி[1] |
துணை வேந்தர் | எசு. கௌரி |
கல்வி பணியாளர் | 300 |
பட்ட மாணவர்கள் | 3000 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 5000 |
அமைவிடம் | , , 13°5′2″N 80°16′12″E |
நற்பேறு சின்னம் | சிங்கம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு |
இணையதளம் | www |
மூடு
தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாகத் தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம்.