செங்கல்பட்டு
செங்கழுநீர் பூக்களால் நிறைந்திருந்த செங்கழுநீர் பட்டு... (செங்கல்பட்டு) / From Wikipedia, the free encyclopedia
செங்கல்பட்டு (ஆங்கிலம்: Chengalpattu) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். இதுவே செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகராகும். இது சென்னையின் புறநகர் பகுதியாகும். 2019-ஆம் ஆண்டு சூலை மாதம் 18-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
செங்கல்பட்டு
செங்கற்பட்டு,செங்கழுநீர்பட்டு | |
---|---|
அடைபெயர்(கள்): செங்கை,ஏரி நகரம் | |
ஆள்கூறுகள்: 12.681900°N 79.988800°E / 12.681900; 79.988800 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
பகுதி | பல்லவ நாடு, தொண்டை நாடு |
அரசு | |
• வகை | முதல் நிலை நகராட்சி |
• நிர்வாகம் | செங்கல்பட்டு நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | க. செல்வம் |
• சட்டமன்ற உறுப்பினர் | ம. வரலட்சுமி |
• மாவட்ட ஆட்சியர் | ஆ. ர. ராகுல் நாத், இ.ஆ.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 16 km2 (6 sq mi) |
ஏற்றம் | 66 m (217 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 65,695 |
• அடர்த்தி | 4,100/km2 (11,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 603 001, 603 002, 603 003, 603 004. |
தொலைபேசிக் குறியீடு | +91-44 |
வாகனப் பதிவு | TN-19 |
சென்னையிலிருந்து தொலைவு | 60 கி.மீ. (37 மைல்) |
காஞ்சியிலிருந்து தொலைவு | 42 கி.மீ. (26 மைல்) |
விழுப்புரத்திலிருந்து தொலைவு | 109 கி.மீ. (68 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 269 கி.மீ. (167 மைல்) |
இது மாநில தலைநகரான சென்னைக்கு தென்மேற்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலை 45-இல் அமைந்துள்ளது. இது சென்னை நகரின் நுழைவாயிலான, மீனம்பாக்கத்திலிருந்து 41 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்கல்பட்டு சந்திப்பு தொடருந்து நிலையம் ஆனது, தெற்கு ரயில்வேயின் முக்கிய தொடருந்து சந்திப்புகளில் ஒன்றாகும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக உள்ளது. இம்மருத்துவமனைக்கு சொந்தமாக மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த நகரத்தில் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றமும், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் உள்ளன.
இந்நகரின் வழியாக பாலாறு செல்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரில் 62,579 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். தற்போதைய நிலவரப்படி சுமார் 85,000 மக்கள் இங்கு வசிக்கலாம்.
செங்கல்பட்டு நகராட்சி 24 ஆகஸ்ட் 2021 அன்று அஞ்சூர், குன்னவாக்கம், திம்மாவரம், வல்லம், ஆலப்பாக்கம், மேலமையூர், சிங்கபெருமாள்கோயில், புலிப்பாக்கம், வீராபுரம், பட்டரவாக்கம், பழவேலி, செட்டிப் புண்ணியம், திருமணி ஆகிய கிராமங்களை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.