சூர்ய கிரண்
From Wikipedia, the free encyclopedia
சூர்ய கிரண் என்பது இந்திய வான்படையின் வானூர்தி செயல்விளக்கக் கலைக் குழு ஆகும். சூர்யா கிரண் வானூர்திக் கலைக்குழு 1996 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது இந்திய விமானப்படையின் 52ஆம் படைப்பிரிவின் ஒரு பகுதியாகும். இந்தக் குழு கருநாடக மாநிலத்தில் உள்ள பீதர் விமானப்படை நிலையத்தை தளமாக கொண்டு செயல்படுகின்றது. இந்த படைப்பிரிவு ஆரம்பத்தில் எச்.ஏ.எல். கிரண் எம்கே 2 பயிற்சி விமானங்களை பயன்படுத்தியது. பின்னர் 2015 இல் ஆக் எம்கே 132 விமானங்களை பயன்படுத்த தொடங்கியது.
விரைவான உண்மைகள் சூர்ய கிரண் வானூர்திக் கலைக்குழு, செயற் காலம் ...
சூர்ய கிரண் வானூர்திக் கலைக்குழு | |
---|---|
செயற் காலம் | 27 மே 1996 - 30 சூன் 2011 15 பிப்ரவரி 2015-தற்போது வரை |
நாடு | இந்தியா |
கிளை | இந்திய வான்படை |
பொறுப்பு | வானூர்திக் கலை |
பகுதி | 52ஆம் படை |
அரண்/தலைமையகம் | பிதார் விமானப்படை தளம் |
சுருக்கப்பெயர்(கள்) | சுறாக்கள் (The Sharks) |
குறிக்கோள்(கள்) | सदैव सर्वोत्तम - Sadaiva Sarvōttama (சமசுகிருதம்: "எப்போதும் சிறந்தவர்கள்")[1] |
நிறம் | இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை |
தளபதிகள் | |
தற்போதைய தளபதி | குரூப் கேப்டன் தில்லன்[2] |
மூடு