சுபுதை
செங்கிஸ் கானின் தளபதி / From Wikipedia, the free encyclopedia
சுபுதை என்பவர் செங்கிஸ் கானின் ஒரு மங்கோலியத் தளபதி ஆவார். இவர் உரியாங்கை எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 20க்கும் மேற்பட்ட இராணுவப் படையெடுப்புகளுக்குத் தலைமைத் தாங்கியுள்ளார். இதன் மூலம் 32 நாடுகளை மற்றும் களத்தில் நடைபெற்ற 65 போர்களை வென்றுள்ளார். வரலாற்றில் வேறு எந்த தளபதியையும் விட அதிக நிலப்பரப்பை வென்றோ அல்லது தாக்கியோ உள்ளார். இவர் ஒக்தாயி கானிடமும் பணியாற்றியுள்ளார். மனித வரலாற்றில் மிகப்பெரிய தொடர்ச்சியான நிலப்பேரரசான மங்கோலியப் பேரரசை அதன் தொடக்கம் முதல் விரிவாக்கம் செய்வதற்காக இவர் இப்போர்களை நடத்தினார்.[1] தகவல் தொடர்பற்ற 13ஆம் நூற்றாண்டில் ஒன்றுக்கொன்று சுமார் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த படைகளை ஒருங்கிணைத்து இயக்கி வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஒன்றுக்கொன்று 500 கிலோமீட்டர் தொலைவிலிருந்த அங்கேரி மற்றும் போலந்துப் படைகளை இரண்டு நாட்களுக்குள் அழித்ததற்காக நினைவு கூரப்படுகிறார். வேறுபட்ட புவியியல் அமைப்புகளில் நடத்திய போர்கள் மற்றும் பெற்ற வெற்றிகளுக்காக இவர் நினைவு கூரப்படுகிறார். நடு ஆசியா, உருசியப் புல்வெளி மற்றும் ஐரோப்பா ஆகிய பல்வேறுபட்ட நிலப்பரப்புகளில் வெற்றிகளைப் பெற்றுள்ளார். வரலாற்றில் சிறந்த இராணுவத் தளபதி எனப் பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார். உருசியா மீது குளிர்காலத்தில் படையெடுத்து அதை வென்றுள்ளார். வரலாற்றில் உருசியா மீது குளிர்காலத்தில் படையெடுத்து வென்ற ஒரே தளபதி இவர் தான். இவர் வென்று சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு நெப்போலியன் மற்றும் இட்லர் ஆகியோர் உருசியா மீது குளிர்காலத்தில் படையெடுத்துத் தோல்வியைச் சந்தித்தனர்.
சுபுதை | |
---|---|
நடுக்காலச் சீன வரைபடம் | |
பிறப்பு | 1175 புர்கான் கல்துன், மங்கோலியா |
இறப்பு | 1248 தூல் ஆறு, மங்கோலியா |
தேசியம் | மங்கோலியர் |
பணி | தளபதி |
பட்டம் | ஒர்லாக் பகதூர், மிங்கனின் நோயன் |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
|
உறவினர்கள் | அசு (பேரன்), செல்மே (அண்ணன்), சுர்கான், கபன், நெர்பி |