சீரீன் இபாதி
From Wikipedia, the free encyclopedia
சீரீன் இபாதி (பாரசீக மொழி:عبادی; ஆங்கிலம்: Shirin Ebadi; பிறப்பு: ஜூன் 21, 1947) என்பவர் ஈரானிய ஈரானிய வழக்கறிஞர், முன்னாள் நீதிபதி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஆவார். இவர் ஈரானில் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மையத்தை (Defenders of Human Rights Center) நிறுவி செயற்பட்டார். 2003 ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவருக்கு இப்பரிசானது மக்களாட்சி மற்றும் மனித உரிமைக்காகப்போராடியதற்காக வழங்கியது. இப் பரிசைப் பெறும் முதலாவது ஈரானியர், இசுலாமியப் பெண் இவர் ஆவார். 2009 ஆம் ஆண்டில் ஈரானிய அதிகாரிகளால் இவ்விருது பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை ஈரானிய அரசாங்கம் மறுத்துள்ளது . [3] 2004 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் , "உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள்" பட்டியலில் இடம்பெற்றார்.[4] "அனைத்து காலத்திலும் மிகவும் செல்வாக்குள்ள 100 பெண்கள்." பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார் .[5]
சீரீன் இபாதி Shirin Ebadi شيرين عبادى | |
---|---|
துனீசியாவில் சீரீன் இபாதி (18 நவம்பர் 2005) | |
பிறப்பு | 21 சூன் 1947 (1947-06-21) (அகவை 77)[1] அமதான், ஈரான் |
இருப்பிடம் | இலண்டன், இங்கிலாந்து |
தேசியம் | இரானியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தெகரான் பல்கலைக்கழகம்[2] |
பணி | வழக்கறிஞர், நீதிபதி |
அறியப்படுவது | மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு |
சமயம் | சியா இசுலாம் |
விருதுகள் | அமைதிக்கான நோபல் பரிசு (2003) |