சிங்கப்பூர்
தென்கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடு / From Wikipedia, the free encyclopedia
சிங்கப்பூர் அல்லது சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore, சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) என்பது தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது.
சிங்கப்பூர் குடியரசு Republic of Singapore
| |
---|---|
குறிக்கோள்: Majulah Singapura (மலாய்) "Onward Singapore" | |
நாட்டுப்பண்: முன்னேறட்டும் சிங்கப்பூர் (மலாய்) "Onward Singapore" | |
தலைநகரம் | சிங்கப்பூர் (நகர அரசு)[lower-alpha 1] 1°17′N 103°50′E |
பெரிய திட்டமிடல் பகுதி மக்கல்தொகை வாரியாக | Bedok[2] |
அதியாகபூர்வ மொழிகள் | |
தேசிய மொழி | மலாய் |
இனக் குழுகள் (2020)[Note 1][lower-alpha 2] | |
சமயம் (2020)[lower-alpha 3] | |
மக்கள் | சிங்கப்பூரர் |
அரசாங்கம் | ஒருமுக ஆதிக்கக் கட்சி நாடாளுமன்றக் குடியரசு |
தர்மன் சண்முகரத்தினம் | |
லீ சியன் லூங் | |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
விடுதலை | |
• சுய-அரசு | 3 சூன் 1959 |
16 செப்டம்பர் 1963 | |
• சிங்கப்பூர் பிரகடனம் | 9 ஆகத்து 1965 |
பரப்பு | |
• மொத்தம் | 734.3 km2 (283.5 sq mi)[5] (176-ஆவது) |
மக்கள் தொகை | |
• 2022 மதிப்பிடு | 5,637,000[lower-alpha 4] (115-ஆவது) |
• அடர்த்தி | 7,804/km2 (20,212.3/sq mi) (2-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2023 மதிப்பீடு |
• மொத்தம் | $757.726 பில்லியன்[7] (38-ஆவது) |
• தலைவிகிதம் | $133,894[7] (3-ஆவது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2023 மதிப்பீடு |
• மொத்தம் | $515.548 பில்லியன்[7] (30-ஆவது) |
• தலைவிகிதம் | $91,100[7] (5-ஆவது) |
ஜினி (2017) | 45.9[8] மத்திமம் |
மமேசு (2021) | 0.939[9] அதியுயர் · 12-ஆவது |
நாணயம் | சிங்கப்பூர் வெள்ளி (S$) (SGD) |
நேர வலயம் | ஒ.அ.நே+8 (சிங்கப்பூர் சீர் நேரம்) |
திகதி அமைப்பு | நாநா/மாமா/ஆஆஆஆ |
வாகனம் செலுத்தல் | left |
அழைப்புக்குறி | +65 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | SG |
இணையக் குறி | .சிங்கப்பூர் |
சிங்கப்பூர் தீவை ஜொகூர் நீரிணை, மலேசியாவில் இருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீரிணை இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆன நாடாகும். மிகக் pகுறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. நிலச் சீரமைப்பு மூலம் கூடுதலான நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது. 1819-ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியுடன் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.