சர்பத்
இனிப்பு பானம் / From Wikipedia, the free encyclopedia
சர்பத் (பாரசீக மொழி: شربت), என்பது ஈரானிய பானமாகும்.[1][2][3] சர்பத் பானம் துருக்கி, காக்கேசியா, பால்கன் குடா நாடுகள் மற்றும் தெற்காசியா நாடுகளிலும் அருந்தப்படுகிறது. பழங்கள், பூ இதழ்கள், நன்னாரி வேர் மற்றும் சர்க்கரைப் பாகு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து சர்பத் தயாரிக்கப்படுகிறது. சர்பத் பானம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.[4]
பிரபலமான சர்பத் பானங்கள் துளசி விதைகள், ரோஜாப் பூ நீர், ரோஜாப் பூ இதழ்கள், சந்தனம், எலுமிச்சை, ஆரஞ்சு, மாம்பழம், அன்னாசி பழம் ஆகியவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவைகளுடன் கலந்து தயாரிக்கப்படுகிறது.
ஈரான், துருக்கி, வளைகுடா நாடுகள், போஸ்னியா, ஆப்கானித்தான், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் வீடுகளில் சர்பத் பானம் குடிக்கப்படுகிறது. மேலும் ரமலான் நோன்பு காலத்தில், நோன்பு திறக்கும் போது முஸ்லிம்களால் சர்பத் பானம் பிரபலமாக உட்கொள்ளப்படுகிறது.[5]
தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்காணா மாநிலங்களில் சர்பத் பானம் கோடைக்காலங்களில் அருந்தப்படுகிறது. இந்தியவில் சர்சபரில்லா மற்றும் எலுமிச்சையுடன் சிறப்பாக தயாரிக்கப்பட்ட சர்பத் பானம் பால் அல்லது சோடா நீரில் கலந்து அருந்தப்படுகிறது. இந்தோனேசியாவின் ஜாவானியர்கள், செர்பத் எனப்படும் பானம் பொதுவாக ரமலான் மாதத்தில் அருந்தப்படுகிறது.