![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cc/View_of_Sundorbone.jpg/640px-View_of_Sundorbone.jpg&w=640&q=50)
சத்பாய் வனவிலங்கு சரணாலயம்
வங்காளதேசத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயம் / From Wikipedia, the free encyclopedia
சத்பாய் வனவிலங்கு சரணாலயம் (Chadpai Wildlife Sanctuary) வங்காளதேசத்தில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் ஒரு பூங்காவாகும். 560 எக்டேர் (1400 ஏக்கர்) பரப்பளவில்[1] பேகர்காட் மாவட்டத்தின் கீழுள்ள மோங்லா துணை மாவட்டத்தில் சத்பாய் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு சனவரி மாதம் 29 ஆம் தேதியன்று வங்காளதேச அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக சத்பாய் வனவிலங்கு சரணாலயம் ஒரு வனவிலங்கு சரணாலயம் என அறிவிக்கப்பட்டது.[2]
சத்பாய் வனவிலங்கு சரணாலயம் Chadpai Wildlife Sanctuary | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | பேகர்காட்டு, குல்னா, வங்காளதேசம் |
ஆள்கூறுகள் | 22.381607°N 89.656354°E / 22.381607; 89.656354 |
பரப்பளவு | 560 ha (1,400 ஏக்கர்கள்) |
நிறுவப்பட்டது | சனவரி 29, 2012 (2012-01-29) |
2012 ஆம் ஆண்டு வங்காளதேச அரசாங்கத்தின் கழுகு பாதுகாப்பு மண்டலம்-2 அட்டவணையின்படி இச்சரணலாயம் கழுகுகளுக்கான பாதுகாப்பான மண்டலங்களில் ஒன்றாகும்.[3] சத்பாய் சதுப்பு நிலம் வங்காளதேசத்தில் உள்ள டால்பின் சரணாலயங்களில் ஒன்றாகும்.[4][5]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cc/View_of_Sundorbone.jpg/640px-View_of_Sundorbone.jpg)
9 டிசம்பர் 2014 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று ஓ.டி சதர்ன் இசுடார் 7 என்ற கொள்கலன் வாகனம் 357,000 லிட்டர் உலை எண்ணெயை ஏற்றிச் சென்றது. மற்றொரு கப்பலுடன் ஏற்பட்ட மோதலால் சுந்தரவனத்தின் கிழக்கு மண்டலத்தின் கீழுள்ள சத்பாய் வனவிலங்கு சரணாலயத்தின் பரப்பில் எண்ணெய் கொட்டியது.[6][7]